2016-10-25-13-24-02

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியலில் காணிக்கையாக ரூ.68.63 லட்சம் கிடைத்தது.
ராமேஸ்வரம் திருக்கோயிலில் 30 நாள்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. 30 நாட்களுக்கு பிறகு, நேற்று சுவாமி, அம்மன் சன்னதி, பஞ்சமூர்த்திகள் சன்னதி, கோதண்டராமர் கோயில், நம்பு நாயகி அம்மன் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
கோயில் திருக்கல்யாண மண்டபத்தில், பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் எண்ணினர். இதில் ரொக்கம் 68 லட்சத்து, 63 ஆயிரத்து, 245 ரூபாய் இருந்தது.
உண்டியலில் மேலும் தங்கம் 27 கிராம், வெள்ளி 3 கிலோ 420 கிராம் இருந்தது. உண்டியல் கணிக்கிடும் பணியில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர், பேஷ்கார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *