2016-10-22-14-04-58

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.83 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்ததும் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இப்பணியில் சுமார் 150 பேர் ஈடுபட்டனர். இதில் ரூ.83 லட்சத்து 29 ஆயிரத்து 700மும், 130 கிராம் தங்கமும், 599 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஹரிப்பிரியா, உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *