2016-10-11-06-22-07

தமிழகம் முழுவதிலும் விஜயதசமி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக தொழில் தொடங்க விஜயதசமி தினம் மிகவும் உகந்த தினம் என்பதால், புதிய தொழில் தொடங்க விரும்புவோர், பூஜைகள் செய்து தொழிலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதிபராசக்தியை துர்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்; லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.

விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகை.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *