24

திருமலைக்கு செல்ல திருப்பதி மலைப்பாதை இன்று முதல் 12-ந் தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 3-ந் தேதி தொடங்க உள்ளது. அதற்காக திருமலையில் உள்ள மாட வீதிகள், முக்கிய வளைவுகள், சந்திப்புகளில் வண்ண மின்விளக்கு அலங்காரம், மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் 750 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும் மலைபாதையில் நடந்து வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அக்டோபர் 1 முதல் வரும் 12-ந் தேதி வரை முதல், இரண்டாம் மலைப் பாதைகள் இரண்டும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையையொட்டி, வரும் 7,8-ந் தேதிகளில் இருசக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *