2016-09-23-14-33-43

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, கோயிலில் ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜையில் பங்கேற்று நிவாரண பூஜை செய்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தனது பெற்றோருடன் வந்த சிந்துவுக்கு, கோயில் அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனர்.
ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜை செய்தார். பின்னர் ஞானப்பூங்கோதை தாயார் மற்றும் காளத்திநாதரை அவர் தரிசித்தார்.
பின்னர் தேவஸ் தானம் சார்பில் அவருக்கு பட்டு வஸ்திரம், பிரசாதங்கள் மற்றும் நினைவுப் படம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
“ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால் இங்கு வருவதாக வேண்டிக்கொண்டதாகவும், அதன்படி இங்கு வந்ததாகவும், மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டும் என வேண்டிக்கொண்டதாகவும் சிந்து கூறினார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *