2016-09-20-09-50-49

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் உள்ள மடத்துக்கு சிறப்பு பூஜைக்காக சென்றிருந்த ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள், அங்கு பூஜைகள் முடிந்து செப்டம்பர் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குத் திரும்பினார்.

அங்கு அவருக்கு பக்தர்கள், மடத்தின் நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி பிற்பகலில், காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஜயேந்திரர் சென்றார். அங்கு கோயில் நிர்வாகிகள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சங்கராச்சாரியார் கலந்து கொண்டு வழிபட்டார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *