2016-09-12-06-10-31

ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை செப்டம்பர் 13 ஆம் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

இந்த ஆண்டு கேரளாவில் திருவோணப் பண்டிகை செப்டம்பர் 14–ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையும், புரட்டாசி மாத பூஜையும் சேர்ந்து வருவதால், சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில், மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்கிறார்.

13–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை ஓணம் சிறப்பு பூஜையும், 16–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை புரட்டாசி மாத பூஜையும் நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *