2016-08-18-08-44-05

திருமுல்லைவாயில் அடுத்த பொத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆகஸ்டு 21 ஆம் தேதி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனையொட்டி 20 ஆம் தேதி மஹாகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை நடக்கின்றன. அன்று மாலை வாஸ்து ஹோமம், முதல் காலயாக சாலை பூஜை போன்றவை நடக்கின்றன. 21 ஆம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பெருங்குளம் ராமகிருஷ்ண சோதிடர் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கிறார். பெருங்குளம் சுப்பிரமணிய சோதிடர் முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரவிசேகர் செய்து வருகிறார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *