2016-08-17-05-34-42

திருவல்லிக்கேணி நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ம்ருத்திகா பிருந்தவன சந்நிதானத்தில் 345-ஆவது ஆராதனை மஹோத்ஸவம் விழா ஆகஸ்ட் 17 தொடங்கி, 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

17 ஆம் தேதி மாலை 6 மணியளவில் அன்னதானத்துக்கு வேண்டிய தானிய பூஜையானது கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-இல் காலையில் பஞ்சாமிர்த அபிஷேகம், நாணயங்களைக் கொண்டு கனகாபிஷேகம், நண்பகல் அன்னதானம் ஆகியன நடைபெறுகின்றன.

தொடர்ந்து சனிக்கிழமை காலை அபிஷேக அலங்காரம், பாலாபிஷேகம், பஞ்சாமிர்தம் அதைத் தொடர்ந்து அன்னதானம், மாலை புஷ்ப பல்லக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை தங்கத்தேரில் பிரஹலாதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் அதைத்தொடர்ந்து 11 மணியளவில் வசந்த பூஜை, அன்னதானம் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *