2016-08-13-11-19-20

ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் கிருஷ்ணா ஆற்றில் தொடங்கி உள்ள புஷ்கர மேளா விழாவில் ஜயேந்திரர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.
புஷ்கர மேளா விழாவை விஜயவாடாவில் உள்ள துர்கா காட் அருகில் காஞ்சி மடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி தொடங்கி வைத்தனர்.

அதன் பின் திருமலை தேவஸ்தானம் சார்பில் திருமலையிலிருந்து கொண்டு சென்ற மஞ்சள், குங்குமம், பட்டுப் புடவை, மலர்கள், பழங்கள் உள்ளிட்ட ஏழுமலையானின் சீர்வரிசைகளைக் கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர் கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற உள்ள இந்த புஷ்கரத்தில் சுமார் 5 கோடி பேர் புனித நீராடுவர் என ஆந்திர அரசு கணக்கிட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *