2016-08-11-11-00-54

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரலட்சுமி விரத பூஜை நடக்கிறது.

வரலட்சுமி விரத பூஜையில் பங்கு கொள்ள விரும்பும் பக்தர்களுக்கென தேவஸ்தானம் 200 டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான இ-தர்ஷன் கவுன்ட்டர்களில் ரூ. 500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்த டிக்கெட் மூலம் இருவர் வரலட்சுமி விரதத்தில் கலந்துகொள்ள முடியும். பங்கு கொள்பவருக்கு ஒரு அங்கவஸ்திரம், ஒரு ரவிக்கை துண்டு, ஒரு லட்டு, வடை பிரசாதமாக வழங்கப்படும். வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அன்று மாலை தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் வலம் வர உள்ளார்.

மேலும் அன்றைய தினம் அபிஷேக சேவைக்கு பின் வழக்கமாக நடைபெறும் திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, லட்சுமி பூஜை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *