இரு கரங்களிலும் வெண்ணெய் ஏந்தி” அருள் புரியும் நவநீத கிருஷ்ணன்” 

Written by

in

மதுரை வடக்கு மாசி வீதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் உள்ளது. இங்கு இரு கரங்களிலும் வெண்ணெய் ஏந்திய திருக்கோளத்தில் நவநீத கிருஷ்ணன்  சத்தியபாமா, ருக்மணி தாயார் ஆகியோருடன் அருள் பாவிக்கிறார்.

வசீகரத் தோற்றத்துடன் காணப்படும் பரந்தாமனின் பேரழகை காண கண் கோடி வேண்டும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் வடக்கு கோபுர திசையில் அருள் புரியும் இக்கோவிலானது நாடிவரும் பக்தர்களின் குறைகளை மீனாட்சி யின் பேரருளால் நீங்க செய்துவிடும் என்பது திண்ணம். 

பொன்.கோ.முத்து திருவள்ளூர்