முதலை வடிவில் முனிவர்!

Written by

in

கேரள மாநிலம்,காசர்கோடு மாவட்டம், அனந்தபுரா கிராமத்தில்' ஏரியின் நடுவில் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இவரை நாராயணன் என்றும் அழைக்கின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் ஆதி மூலமாக கருதப்படும் இந்த ஏரி கோவில் குகை வழியாக தினமும் ஆனந்த பத்மநாத சுவாமி வந்து செல்வதாக நம்பப்படுகிறது, மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில்' வில்வ மங்கலா என்ற மாமுனிவர் திருமாலை நோக்கி கடும் தவம்  புரிந்துகொண்டு இருந்தபோது.

அவரது தவத்தை ஏற்று ஒரு நாள் மகாவிஷ்ணு  சிறுவன் வடிவில் அவர் முன் தோன்றினார். அப்போது அந்த சிறுவன் தெய்வீக கடாட்சத்துடன் இருந்ததைக் கண்ட,  வில்வ மங்கலா முனிவர் ' சிறுவனை நோக்கி யார் ? நீ என கேட்டார். அதற்கு சிறுவன் தன்னை யாருமற்ற அனாதை எனக் கூறினான்.  இதனால் இறக்கப்பட்ட  முனிவர் அவனை தன்னோடு, இருக்குமாறு பணிந்தார், அப்போது  சிறுவன்  நிபந்தனை ஒன்றை விதித்தான். எப்போதாவது என் மீது நீங்கள் கோபம் கொண்டால், அடுத்த கணமே' நான் உங்களை விட்டு சென்று விடுவேன்’ எனக் கூற, அதற்கு முனிவரும் உடன்படுகிறார்.

நாட்கள் சில கடந்த பின் முனிவருக்கு' தொண்டு புரிந்து வந்த அந்த சிறுவன். அதன் பின் தனது சேட்டைகளை காண்பிக்க தொடங்கினான். ஒரு நாள் அவனது குறும்பு எல்லை தாண்டி போனது, இதனால் ஆத்திரம் அடைந்த முனிவர் அவன் மீது கடும் கோபம் கொண்டார். அப்போது அச்சிறுவன் முன்பு தான் கூறியதுபோல, முனிவரிடம் இருந்து விலகிச் செல்வதாகவும்,  இனி தன்னைப் பார்க்க வேண்டும் என்றால், அனந்தன் காட்டில் மட்டுமே காண முடியும் என கூறிவிட்டு உடனே அந்த ஏரி பகுதியில் உள்ள குகைக்கோள் சென்று மறைந்து விடுகிறான். அப்போதுதான், முனிவருக்கு புரிந்தது அந்த சிறுவன் வேறு யாருமல்ல, மகாவிஷ்ணு என உடனே' 
சிறுவன் மறைந்த தண்ணீர் நிரம்பிய குகையை பார்க்கிறார் முனிவர்.

அதனுள்  சிறுவனைத் தேடி முதலையாக உருவெடுத்து அந்த குகை வழியே சென்றவர், ஒரு கடற்கரையை கண்டு   வெளியேறி, வனப்பகுதியை  அடைகிறார். அங்கு அவர் முன் தோன்றிய அந்த சிறுவன், சற்று நேரத்தில் ஒரு இலுப்பை மரமாக மாறினான். அந்த இலுப்பை மரத்தின் கிளைகள் விரிந்து அடுத்த வினாடி பாற்கடலில்  சர்ப்பத்தின் மேல் பள்ளிகொண்ட மகாவிஷ்ணுவின் அவதார திருமேனியை கண்டு ஆனந்தம் அலைந்ததாகவும்,  இந்த இடமே தற்போது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோவிலாக மாறிவிட்டது என்கிறது இதன் தல புராணம், மேலும்  வில்வ மங்கலா முனிவருக்கு திருமால் காட்சியை அளித்தமையால், சிறுவனை தேடி செல்வதற்காக அவர் எடுத்த எடுத்த முதலை வடிவத்திலேயே தற்போதும் ஏரி கோவிலில் அவர் வாசம் செய்து வருவதாகவும், பக்தர்களின் நம்பிக்கை அதனை மெய்ப்பிக்கும் வண்ணம், தற்போதும் ஏரி கோவில் குகையில் முதலை ஒன்று உள்ளதையும், அந்த முதலையானது மாமிசங்களை உண்ணாமல் அதாவது ஏரியில் உள்ள மீன்களைக் கூட சாப்பிடாமல், சைவத்தை கடைபிடித்து வழிபாடு முடிந்ததும் நாராயணனுக்கு நெய்வேதனம் செய்யப்பட்ட பிரசாதத்தை அர்ச்சகர் கொண்டு சென்று' பாபியா (Babia or Babiya) என அழைத்ததும் ஒரு குழந்தையைப் போன்று தண்ணீரில் துள்ளி குதித்து நீந்தி வந்து கரையில் வைக்கப்படும் நெய் வேதனை பிரசாதத்தை உண்டு விட்டு செல்கிறது. இதுவரை ஏரியில் நீராடும் பக்தர்களுக்கு முதலையால் எந்தத் தீங்கும் ஏற்பட்டதில்லை, பல ஆண்டு காலமாக இந்த ஏரியில் ஒரு முதலை மட்டுமே வாழ்ந்து வருகிறது.

ஒரு முதலை உயிர் நீத்தாள். அதன் உடலை அப்புறப்படுத்திய அடுத்த கணமே அதிசய தக்க வகையில் இன்னொரு முதலை அதன் இடத்தை நிரப்புகிறது. அந்த முதலையும் பாபியா (Babia or Babiya)  என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டான தற்போதும் இங்கு நடைபெற்று வரும் தெய்வீக நிகழ்வு ஞானிகளால் மட்டுமே உணரக்கூடியதாகும். 

பொன்.கோ.முத்து திருவள்ளூர்