“ஜக்கம்மா” ஊர் ஜமீன்தாருக்கு  சாபம் கொடுத்தது ஏன் ?

Written by

in

இஸ்லாமிய அரசன்  ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருத்தியை மனம் முடிக்க விரும்பி பெண் கேட்டான்.  தங்கள் சமுதாயப்  பெண்ணின் பாதுகாப்பிற்காக அவளது உறவினர்கள். தெற்கு நோக்கி வந்தபோது.  துங்கபத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் ஆற்றின் கரையை கடக்க முடியாமல் நின்றனர். அப்போது  கம்பளத்தார் கூட்டம் வடகரையில் தங்களது குல தெய்வமான எல்லம்மா தேவியை வணங்கினர்.

திடீரென அங்கு வந்த குழந்தை ஒன்று   நீங்கள் ஆற்றின் கரையைக் கடக்க   மரங்கள் உங்களுக்கு பாலமாக அமையும், ஆற்று நீர் அதற்கு வழி விடும், நீங்கள்  தெற்கு சீமைக்கு சென்று சிறப்போடு ஆட்சி செய்து. வாழுங்கள், உங்களுடன் இருந்து  காப்பேன்" என  மறைந்தது. அதன்படி நீர் விலகி, மரங்கள் பாலமாக அமைந்து இஸ்லாமிய அரசன். தெற்கு கம்பள நாட்டுக்கு வந்து அந்தக் குழந்தை கூறியபடியே நல்லாட்சி செய்தான்.

குழந்தை வடிவமாக வந்து இஸ்லாமிய அரசனுக்கு உதவியது யார்" தெரியுமா ?  வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தான் 
யார் ? இந்த ஜக்கம்மா"  இவளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு முன்பாக வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
  ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பம் கட்ட மறுத்து வீர போர் புரிந்து தாய் திருநாட்டிற்காக தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மன். பாஞ்சாலங்குறிச்சியில், ஜெகவீர கட்டபொம்மன்- ஆறு முகத்தம்மாள் தம்பதியருக்கு 1760 ஆம் ஆண்டு, ஜனவரி 3, ஆம் தேதி அன்று பிறந்தார்.  வீரபாண்டிய கட்டபொம்மன்.

தனது  30,வது வயதில் 1790 ஆம், ஆண்டு,பிப்ரவரி 2 ஆம், தேதி அன்று" 47 வது பாளையக்காரராக பதவி ஏற்று கொண்டார்.  வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு சங்கம்மாள் என்ற மனைவியும், ஊமைத்துரை, துரைச்சிங்கம் ஆகிய இரண்டு சகோதரர்களும்,  ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். கட்டபொம்மன் 9 ஆண்டுகளுக்கு மேல் அரசு பதவி வகித்து வந்தார். அப்போது கர்நாடக பிரதேசத்தை ஆண்ட, ஆற்காடு நவாப்புகள் பாளையக்காரர்களிடம், கப்பம்  வசூலிக்கும் அதிகாரத்தை கும்பினியாரிடம் வழங்கினர். அதன்படி நெல்லை சீமையில் கப்பம் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய படை தளபதி மாக்ஸ்வெல் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம், கப்பம் வரிவசூலிக்க முடியாமல் திணறினான்.

இதன் காரணமாக'  கி.பி. 1797 ஆம், ஆண்டு முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு தனது   படையுடன் போரிட வந்தான். 1797 முதல் – 1798 வரை நடந்த இந்த போரில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்ற முடியாமல், வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோல்வி அடைந்து புற முதுகு காட்டி ஓடினான் அதன் பின்னர். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்டபொம்மனை நெருங்க முடியாமல், இறுதியில்' 1798 ஆம், ஆண்டு செப்டம்பர் 10‌ ஆம், தேதி தந்திரமாக பேச்சு வார்த்தைக்கு, அழைத்து கட்டபொம்மனை  இராமநாதபுரத்தில் சந்தித்தான்.

அப்போது வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய ஆங்கிலேயர்கள் முயன்றனர். அதை முறியடித்து வீரபாண்டிய கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். பின்  1799 ஆம், ஆண்டு செப்டம்பர் 5 ஆம், தேதி  இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதி தலைமையில் நடந்த கடும் போரில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. இரு தரப்பிலும் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.

இருப்பினும்  வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். பின் 1799 ஆம், ஆண்டு' செப்டம்பர் 9 ஆம் தேதி ஆங்கிலேயர்கள். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்றினார். 1799 ஆம், ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி, புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம்  ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம், ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி' ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் உத்தரவுப்படி, பாரத தாய் திருநாட்டை காக்க போராடிய மாவீரன்" வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, வீர மரணம் அடைந்தார். 

தனது குலதெய்வமான ஜக்கம்மா மீது அதிக பக்தி கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று ஜக்கம்மாவை வழிபட்ட பின்னரே" காரியத்தில் இறங்குவதை தனது வாழ்நாளில் கடைப்பிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட  எருமார்பட்டி ஊராட்சி. முன்பு வையாபுரிகிராமம் என்று அழைக்கப்பட்டது. இங்குதான் ஜக்கம்மாளின் குடும்பம் வசித்து வந்தது, இந்த வையாபுரி பகுதியிலிருந்து தான். ஜோதி நாயக்கனூர் ஜமீன்தாரின்  குதிரைகளுக்கு கொள்ளு, மற்றும் தீவனங்கள் அனுப்பப்படுவது வழக்கம்.

ஒருமுறை ஜமீன்தார் இங்குள்ள தனது விலை நிலங்களை பார்வையிடுவதற்காக' குதிரையில் வலம் வந்தபோது, தன் வீட்டின் முன்பாக கோலம் இட்டுக் கொண்டிருந்த பதினாறு வயது சிறுமியான  ஜக்கம்மாளை கண்டார். அவளது அழகில் மயங்கிய ஜமீன்தார். ஊர் முக்கியஸ்தர், மூலம்  ஜக்கம்மாவின் குடும்ப விபரம் குறித்து தெரிந்து கொண்டு,  உடனே ஜமீன்தார் ஊர் முக்கியஸ்தரை அழைத்துக் கொண்டு. ஜக்கம்மா  வீட்டுக்கு சென்று அவளது பெற்றோரிடம் பெண் கேட்டார். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த ஜமீன்தார் வரும் பௌர்ணமி தினத்தில் ஜக்கம்மாவை எனக்கு திருமணம் செய்து தராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ? என மிரட்டியதால், ஜக்கம்மாவின் அண்ணன் யோசித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தான். 
 

உடனே" ஜமீன்தார். “என்ன யோசனை வேண்டி கிடக்கு, வருகிற பௌர்ணமி அன்று"  சொன்னது நடக்கணும்" என்றபடி ஊர் முக்கியஸ்தருடன்  கோவமாக ஜமீன்தார், சென்ற பின் ஜக்கம்மா, தனது தாயிடம் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் அம்மா" என்றுகூறி கண்ணீர் விட்டு அழுதாள். பௌர்ணமிக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் ஜமீன்தார் ஆட்களும், ஊர்முக்கியஸ்தர்களும்  ஜக்கம்மாவின், குடும்பத்தினரிடம் திருமணத்திற்கு தயாராக இருக்கும்படி எச்சரிக்க விடுத்தனர். 
இதனால் ஜமீன்தாரை பகைத்துக்கொண்டு ஊரில் வாழ முடியாது என்பதால்,  ஊரைவிட்டு போக முடிவு செய்து. அன்றிரவு உடைமைகளை எடுத்துக்கொண்டு ஜக்கம்மாளுடன் அவளது.  குடும்பத்தினர் மேற்குத்தொடர்ச்சி மலை வழியாக' லிங்கநாயக்கன்பட்டி' மலைப்பகுதிக்கு சென்றபோது. கடும் மழை பொய்தது இதனால் ஒதுங்க இடமின்றி அனைவரும் தவித்தனர், அப்போது ஜக்கம்மாளின் அண்ணன் மனைவி, ‘‘நல்லா வாழ்ந்த குடும்பம் இன்னைக்கு இவளால் தான் நடு காட்டுல நாதியத்து நிக்குது என புலம்பினாள். இதைக்கேட்டு மன வேதனை அடைந்த  ஜக்கம்மா,  திடீரென வேகமாக சென்று யாரிடமும் சொல்லாமல், மலை உச்சியில் அமர்ந்து ஓ, வென கதறி அழுதாள் தனது குடும்பம்  கெட்டதற்கு ஜமீன்தார்தான் காரணம். குதிரை இருப்பதனால்தானே, குதிரையில் வந்து என்னைப்பார்த்து எனது குடும்பத்தையே" அழித்து விட்டான் பாவி என கோபம் அடைந்து, இந்த பகுதியில் இனி எள்ளு – கொள்ளு விளையக்கூடாது, குதிரைக்கு பட்டம் சூட்ட ராஜா நிம்மதியா வாழக்கூடாது.

ராஜா பட்டம் சூட்டிய குதிரையும் இருக்கக்கூடாது. என தனது குலதெய்வத்தை வேண்டி சாபமிட்டபடியே"  மலை உச்சியிலிருந்து கீழே குதித்து" ஜக்கம்மா உயிர் விட்டால்,  உடலை எரியூட்டுவதற்காக குடும்பத்தினரும், உறவினர்களும் தூக்கிக்கொண்டு வந்து, இப்போதுள்ள ஜக்கம்மாள் கோயில் இருக்கும் இடத்தில் எரியூட்டினார்கள். அப்போது, மன வேதனையால், உயிர்விட்ட  ஜக்கம்மாளின் சேலை மட்டும் தீயில் கருகாமல் அப்படியே இருந்தது, இதனால் அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் சேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
 

அப்போது வையாபுரி கிராமத்தில் உள்ள சிறுமி ஒருத்திக்கு, அருள் வந்து ஆடினாள். ‘‘நான், ஜக்கம்மா வந்திருக்கேன். எனக்கு இங்கேயே" கோவில் கட்டி வணங்கினா குலதெய்வமாயிருந்து. இந்த ஊர் மக்களை காப்பாற்றுவேன்" உங்க நாக்கில் இருந்து ஊருக்கு ஏற்படும் நல்லது கெட்டது முன்கூட்டியே சொல்லுவேன்" என்றால் அதன்படி கட்டப்பட்டது தான் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஜக்கம்மா கோவில், இப்போதும் அப்பகுதியில் கொள்ளு, எள்ளு முளைப்பதில்லை அதனை ஜக்கம்மாளின் பூர்வீக விவசாயிகள் யாரும் விளைவிப்பதும் கிடையாது இன்று வரை ஜக்கம்மாவை தங்களது குலதெய்வமாகவே"அவர்கள் கொண்டாடி, வணங்கி வருகின்றனர்.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்