தன் கண்ணை பிடுங்கி மகாவிஷ்ணு சிவபெருமானுக்கு பூஜை செய்தது ஏன் ? 

Written by

in

ஒருமுறை நாரத முனிவருக்கு பக்தி என்பதற்கு பொருள் குழப்பம் ஏற்பட்டது, இது குறித்து அறிந்து கொள்வதற்காக மகாவிஷ்ணுவிடம் சென்ற போது அவர் கொடுத்த விளக்கத்தில் திருப்தி அடையாததால் சிவபெருமானிடம் சென்று விளக்கம் கேட்குமாறு' மகாவிஷ்ணு கூறியதால் நாரத முனிவர் கைலாயம் சென்று சிவபெருமானிடமும் விளக்கம் கேட்டார், அப்போது சிவபெருமான் பூலோகம் சென்று சுயம்பு வடிவாக தோன்றிய ஆயிரம் சிவலிங்கங்களை வழிபடுமாறும் அப்படி வழிபட்டால் அதற்கான விளக்கத்தை தானே" வந்து கூறுவதாக தெரிவித்தார், அதனை ஏற்று நாரத முனிவரும் பூலோகம் வந்து பல ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து, நிறைவாக திருமாற்பேறு என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற அங்கு கருவறையில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் எதிரில் லிங்கத்தை வணங்கிய வாறு'  விஷ்ணுவின் சிலையும் இருந்தது. அதைக் கண்ட நாரத முனிவருக்கு வியப்பு ஏற்பட்டது.

இதனால் இது விஷ்ணு ஆலயமா ? அல்லது சிவன் ஆலயமா ?  என்ற சந்தேகம் உண்டாகவே"
  அங்கிருந்த அர்ச்சகரியிடம் கேட்டார்.  அந்த அர்ச்சகரும்" இது விஷ்ணுவின் ஆலயமே என்று கூறினார். அதைக் கேட்ட நாரத முனிவருக்கு ஆச்சரியம் உண்டானது அப்படி என்றால் இங்கு மூலவராக விஷ்ணு இல்லையே . என காரணம் குறித்து கேட்டபோது, அர்ச்சகர் அவருக்கு ஆலய பெருமை குறித்து எடுத்துக் கூறியதை நாமும் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

புராண காலத்தில் குபன் என்ற  மன்னன் ஒருவன், ததீசி எனும் மாமுனிவருடன் யுத்தம் செய்த போது.  விஷ்ணுவின் பக்தன் ஆன"மன்னனின். வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட மகா விஷ்ணு' அவனுக்கு ஆதரவாக தானும் ததீசி முனிவருக்கு எதிராக போர் புரிந்தார், அப்போது மகாவிஷ்ணு நடத்திய சக்கர யுத்தத்தை தனது தகவலிமையால், ததீசி முனிவர் அதனை செயலற்று போகும்படி செய்தார். இதனால்,  தனது ஒரே சக்தி வாய்ந்த ஆயுதமான சக்ராயுதமே செயல் இழந்து போனதால், கவலையடைந்த மகாவிஷ்ணு' என்ன செய்வதென்று புரியாமல்  தேவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அவர்களின் அதன்படி,  மகாவிஷ்ணு, ஏற்கனவே"  சலந்தராசூரன் எனும் கொடுங்கோலனை  அழிக்க தான் உருவாக்கிய சுதர்சன சக்கரம்,  சிவபெருமானிடம் இருப்பதை அறிந்து அதனை,  சிவபெருமானிடம் இருந்து மீண்டும், திரும்பப் பெற்றுக் கொள்ள எண்ணி, சிவ வழிபாடு நடத்தி தவம் இருக்க முடிவு செய்து, சிவபெருமானை துதித்து பூஜை செய்ய முடிவு செய்து, சிவ பூஜையை செய்ய சக்தி வாய்ந்த சுயம்புலிங்கம் தோன்றிய கோவிலை தேடி அலைந்து, இறுதியாக' உமையவள் பூஜித்து வணங்கிய திருமாற்பேறு" எனும் இந்த இடத்தை வந்தடைந்து, உமையவள், பூஜித்த அதே" சுயம்புலிங்கத்தை நாள்தோறும்,  ஆயிரம் தாமரை மலர்களை கொண்டு, பூஜை செய்து. மகாவிஷ்ணு' சிவபெருமானை நோக்கி தவம் தவம் புரிந்தவாறு இருந்தபோது, ஒருநாள் அவரை சோதிக்க நினைத்த சிவபெருமான்.

வேண்டும் என்றே" விஷ்ணு கொண்டு வந்து 1000, தாமரை மலர்களில் ஒரு மலரை மாயமாக மறைய செய்து விட்டார். 999 தாமரை மலர்களைக் கொண்டு, அர்ச்சனை செய்தபோது, கடைசி மந்திரத்தை உச்சரித்து போட,  தாமரை மலர் ஒன்று இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மகாவிஷ்ணு மனம் தளராமல். உடனே" தனது ஒரு கண்ணை பிடுங்கி அதையே தாமரை மலராக எண்ணிக்கொள்ளுமாறு, ஈசனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். மகாவிஷ்ணுவின் பக்தியைக் கண்டு வியந்த சிவபெருமான். இறைவனாக இருந்தாலும், தன்னை வணங்கும்போது, தன் பக்தியை உணர வைக்க' தனது கண்ணையே பிடுங்கி பூஜித்ததை கண்டு, உள்ளம் மகிழ்ந்து ஈசன் கண்களை மேலும் அழகு பெற செய்து' தன்னிடம் இருந்த சக்கரத்தையும், மகாவிஷ்ணுவிடம் கொடுத்து, போரில் வெற்றி பெற வாழ்த்தி, இனி செந்தாமரை கண் அழகர் என அழைக்கப்படுவாய்" என அருளினார்.

மகாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்டு, தனது சக்கரத்தை திரும்ப பெற்றதினால்  இதை,  ஹரி சக்ரபுரம் என கூறப்படுவதுண்டு,  ஆகவே உண்மையான பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டாக இக்கோவில் இருப்பதாக, அர்ச்சகர் கூறவும், அதைக் கேட்ட நாரதர் பக்திக்கு அடையாளம், அந்த கோவிலில்  உள்ள மகா விஷ்ணுவே என்பதை புரிந்து கொண்டு உடனடியாக ஈசனையும், திருமாலையும் சந்திக்க வேண்டி மேல் லோகம் புறப்பட்டு, சென்றார். இந்த அறிய புராண வரலாற்று நிகழ்வு அரங்கேறிய திருக்கோவில். தற்போது திருமாற்பேறு என்றும் , அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் எனவும், போற்றப்படுகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவில்' இறைவனைப் போற்றி திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், பதிகம் பாடி உள்ளனர்.

இங்கு தாமரை மலர்களால் திருமால் ஈசனை வழிபட்டதால், எம் பெருமானுக்கு தாமரை கண்ணழகர் என காரணயரும் உண்டு, அறியும் சிவனும் ஒரே இடத்தில் அருள் பாவிப்பதால் சிவா விஷ்ணு கோவிலாகவும் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவம், அன்று கருட வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.  இந்த அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் திருமால்பூர் என்னும் இடத்தில் உள்ளது.

பொன் .கோ.முத்து திருவள்ளூர்