இராவணனை நெருங்க முடியாமல் நின்ற சனீஸ்வரன்!

Written by

in

ஈசனை மெய்ஞானத்துடன் வணங்கும் பக்தர்களை  சனீஸ்வரனாலும் நெருங்க முடியாது' என்பதற்கு சாட்சி மார்க்கண்டேயன் மட்டுமல்ல, தென் தமிழகம் வந்தபோது சிவ பூஜையில் இருந்த இலங்கை மன்னன் இராவணனை நெருங்க முடியாமல் சனீஸ்வர பகவான் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற திருக்கோவில் எங்கே உள்ளது தெரியுமா ? வாருங்கள் தரிசிக்கலாம்.

திருக்கைலாயத்தில் ஒரு ஒரு நாள்  பூத பூத கணங்கள் ஆயிரம் பேர், சிவஞான விளக்கத்தை அறிய வேண்டி  சிவபெருமானிடம் முறையிட்டனர்.  சிவபெருமானும், அவர்களின் கோரிக்கையை  ஏற்று, அவர்களுக்கு சிவஞான விளக்கம் அளிக்க எண்ணி' பின்  பூத கணங்களிடம், "நீங்கள் அனைவரும்,  புனித பூமியான தென்னாட்டிற்கு  செல்லுங்கள். அங்கு தென் பகுதியில்'  பெண்ணை ஆற்றின் படுகையில் உள்ள  இரண்டு சுவைகளை அறிய செய்யும் இரு வேறு' மரங்கள் உள்ளன. ஒன்று கசப்பை உணர்த்தும் வில்வம், மற்றொன்று இனிப்பை உணர்த்தும் மாமரம்.  அமைந்துள்ள நதிக்கரையில், சுயம்புபாக நான் வீற்றிருப்பேன். அங்கு அகத்திய மாமுனிவர் வந்து தினந்தோறும்  எம்மை வணங்குவது  வழக்கம்.

நீங்களும் அவ்விடத்தில் எம்மை வேண்டி தவம் இருங்கள். உரிய நேரத்தில் நான்  அங்கு தோன்றி உமக்கு' சிவஞான விளக்கம் அளிக்கிறேன்" என உரைத்தார். ஈசனின் வாக்கில் நெகிழ்ந்த  பூதகணங்கள் இறைவனிடம் ஆசி பெற்றுக் கொண்டு,  பூலோகம் வந்தடைந்தனர். சிவபெருமான்  குறிப்பிட்ட இடத்தை தேடி வந்து கொண்டிருந்தனர்.  அப்போது திடீரென அகத்திய மாமுனிவர் எதிரே வருவதைக் கண்டு, அவரை வணங்கி' பூலோகம்    வந்த விவரத்தை எடுத்துரைத்தனர்.  அப்போது அகத்திய முனிவர்,
 "நான் பொதிகை மலை நோக்கி  செல்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட வில்வம், மாமரம் உள்ள அந்த திருத்தலம், செல்லும் வழியில் தான் உள்ளது. என்னுடன் வாருங்கள்" அழைத்துச் செல்கிறேன்' என அவர்களுக்கு சுயம்பு வடிவான சிவலிங்கத்தை காட்டி பூஜித்து விட்டு, பூதகணங்களை வாழ்த்தி தனது பயணத்தை தொடர்ந்தார்.

பின்னர் பூதகணங்கள்  அங்கேயே தங்கி புனித நீராடி சிவனை வழிபட்டு, கடும் தவம் இருந்தனர். அவர்களின் பக்திக்கு இணங்கி  சிவபெருமான் தோன்றி அவர்களுக்கு காட்சியளித்து. தன்னை வழிபட்ட ஆயிரம் பூத கணங்களுக்கும்,  சிவபெருமான் சிவஞான விளக்கம் அளித்தார். அதைக் கேட்டு தெளிவு பெற்ற ஆயிரம் பூத கணங்களும் ஈசனுக்கு சிரம் தாழ்த்தி தங்கள் நன்றியினை தெரிவித்து, பூலோகத்திலேயே ஒரு யுக காலம் சிவனை வணங்கி தவம் இருந்து வில்வ மரங்களாக மாறி, வில்வ இலைகளால் சிவனை அர்ச்சனை செய்து சிவன் ஞான பேரின்ப முக்தி அடைய விரும்புவதாக வேண்டினர், அதன்படி இறைவன் அருள ஆயிரம் பூதகணங்களும் வில்வ மர வனமாக மாறியதால்' இந்த இடம் 'வில்வாரண்யம்' என பெயர் பெற்றது.

தங்கள் வில்வ இலைகளை தாங்களே உதிர்த்து எடுத்து' இறைவனுக்கு  பூத கணங்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்…. அப்போது சிவ பக்தனான இலங்கை மன்னன்  இராவணன், திருக்கைலாயத்திலிருந்து அழியா வரம்    பெற்று தனது விமானத்தில் ஆகாய மார்க்கமாக வரும் போது, இந்த திருக்கோவிலை கண்டு, இராவணன் விமானத்தை உடனே தரை இறக்கினான். அப்போது  ஓம் நமச்சிவாய" ஓம் நமச்சிவாய" என்ற திருமந்திரம் உச்சரிக்கப்படுவதை கேட்டு, சிவ பக்தனான இராவணன் அங்குள்ள நதியில் புனித நீராடி சிவனை வணங்க' சென்றான். உச்சிக்கால பூஜை நேரம் என்பதால், அங்கிருந்த அனைத்து, வில்வ மரங்களும் பூத கணங்களாக மாறி வில்வ அர்ச்சனை செய்வதை கண்டு உள்ளம் மகிழுந்து.  

தானும் சிவ பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டான். ஏற்கனவே தேவலோகத்தில் இராவணனை பிடிக்க பின் தொடர்ந்து வந்த சனி பகவான். இங்கு சிவ நாமம் ஒலித்துக் கொண்டிருந்ததால், சனிபகவானால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. ஈசனின் பேராற்றலை உணர்ந்த சனி பகவான், இராவணனை நெருங்க முடியாததால் தானும் சிவனை வணங்கி விட்டு, தான் வந்த வேலையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக  தலபுராணம் சொல்கிறது.கடலூர் மாவட்டத்தில் வில்வநகர் பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் இருக்கும் இடம், வில்வ மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால், வில்வ' வனம்' என அழைக்கப்பட்டு, இறைவன் வில்வன நாதர்,வில்வநாதீஸ்வரர், என அழைக்கப்படுகிறார்.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்