காமதேனு வழிபட்ட ஆதி லிங்கம்" சரஸ்வதி தேவியை பிரம்மதேவன் திருமணம் செய்த திருக்கோவில்' பசுவின் பெயர் தாங்கி சிவபெருமான் அருள் புரியும் புண்ணிய பூமி செல்வம் வாருங்கள்.
புராண காலத்தில்,பிரம்மதேவன் ஒருமுறை தான் படைப்பு தொழிலை நிறுத்திவிட்டால், காத்தல், அழித்தல் பணிகளை செய்பவர்களுக்கு வேலை பறிபோகிவிடும் என நினைத்து. ஆணவத்துடன் நடந்து கொண்டார். அவரது அறியாமையை அகற்ற நினைத்த ஈசன். படைப்புத் தொழிலை பிரம்மன் தொடங்கினார். ஆனால் எந்த ஒரு உயிரினமும் தோன்றவில்லை. அப்போது சிவபெருமானை வணங்க கயிலைக்கு வந்த காமதேனுவிடம், 'நீ பூலோகம் சென்று, பிரம்மனுக்கு பதிலாக படைப்பு தொழில் புரிந்து வா'என அருளினார். அன்று முதல் பிரம்ம தேவனுக்கு பதிலாக பதிலாக காமதேனு படைப்புத் தொழிலை செய்யத் தொடங்கியது. இதனை அறிந்து பிரம்மதேவன், தனது கர்வத்தை விட்டு கைலாயம் சென்று சிவபெருமானை வணங்கி தான் செய்த தவறுக்கு மனம் உருகி வருந்தினார். அப்போது தனக்கு மீண்டும் படைப்புத் தொழில் செய்ய அனுமதி தர வேண்டும் என பக்தியுடன் வேண்டினார்.
உடனே சிவபெருமான், 'நீ பூலோகம் சென்று" ஆம்பிரமா நதிக்கரையில், வஞ்சிவனம் என்னும் இடத்தில் என்னை நோக்கி தவம் இருந்து வழிபடுவாயாக' என கட்டளையிட்டார். அதனை ஏற்று பிரம்ம தேவன், ஆம்பிரமா நதிக்கரையில் ஈசனை வழிபட்டு கடும் தவம் புரிந்து வந்தான். அதன் பலனாக பிரம்ம தேவனுக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அப்போது 'பிரம்ம தேவனே" உன்னுடைய அனைத்து தீய வினைகளும் இன்றுடன் விலகியது. எனவே இவ்விடத்தில் நீ" வேத விற்பனர்களை அழைத்து. மகா வேள்வி ஒன்றை நடத்தி, கலைகளின் அம்சமான கலை மகளை திருமணம் புரிந்து, படைப்பு தொழிலை, இங்கு இருந்தவாரே" தொடங்குமாறு அருளினார். அதன்படி பிரம்மதேவன், ஆம்பிரமா நதியின் வடபுறத்தில் புனித பிரம்ம தீர்த்தம் உருவாக்கி' ஈசனை வழிபட்டு, வழிபட்டார். பின்னர் வெண்ணெய் மலையின் வடக்கே மகா வேள்விச் சாலை ஒன்றை ஏற்படுத்தி வேத விற்பனர்களை அழைத்து வேள்வி நடத்தினார். பின் கலைகளின் தலைவியான சரஸ்வதி தேவியை பிரம்மதேவன் திருமணம் புரிந்து. அப்பகுதியில் இறைவனுக்கு திருக்கோவில் ஒன்றையும் எழுப்பினான். இதனிடையே" பூலோகம் வந்த காமதேனு பல சிவத்தலங்களை தரிசித்து விட்டு வஞ்சிவனம் வந்தது. தவம் புரிந்தது. ஒரு நாள் விண்ணில் இருந்து ஒரு அசரீரி கேட்டது. 'காமதேனுவே" வஞ்சி வனத்தில், ஒரு புற்றில், மகாலிங்கம் என்னும் ஆதிலிங்கம் உள்ளது. அதனை நீ" புனித பிரம்ம' தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு வா' என அக்குரல் கூறிய வாரே"
காமதேனுவும் சுயம்பு வடிவான ஆதி லிங்கத்தை கண்டு, தனது மடியில் இருந்து பாலை சுரக்க நாள்தோறும் வழிபாடு வந்தபோது.
ஒரு நாள் அதன் கால் குளம்பு, இறைவனின் திருமுடியின் இடது பாகத்தில் பட்டுவிட்டது. இதன் காரணமாக அதில் இருந்து ரத்தம் வழிந்தது. அதைக் கண்ட காமதேனு பதறியது. அப்போது சிவபெருமான் தோன்றி, 'காமதேனுவே" கலங்க வேண்டாம். இது உன் தவறல்ல. நீ எம்மை நீ" வணங்கியதால், இனி' இந்த ஆதி லிங்கம் பசுபதிநாதர் அன்றே" அழைக்கப்படும் என அருளினார். பிரம்மதேவன் மட்டுமல்ல' பசுவும் படைப்புத் தொழில் புரியும் என்பதை பிரம்மனுக்கு உணர்த்துவதற்காகவே உன்னை பூலோகம் வந்து படைப்புத் தொழில் புரியசெய்யச் செய்தேன். நீ" பிரம்மதேவனிடம் படைப்புத் தொழிலை கொடுத்துவிட்டு, தேவலோகம் செல்லுமாறு அருளாசி வழங்கி விண்ணில் மறைந்தான் ஈசன்" என்பது.
ஆதி கருவூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோவில் தல வரலாறு ஆகும். ஏழு நிலை ராஜகோபுரம் ஏழு ஆதி சிவலிங்கங்களை நோக்கி மேலோங்கி காட்சியளிக்கிறது. இதனைக் கடந்து உள்ளே சென்றால், ஐந்து பஞ்சபூதங்களை நினைவூட்டும். இதனினும் சிறிய ஐந்து நிலைகளுடன் கோபுரம் உள்ளது. தெற்கு விநாயகர் பெருமானும், குடை விரித்த நாக பந்தல் நிழலின் கீழ், காமதேனு ஆதி லிங்கத்திற்கு, பால் பாலை சுரக்கும் காட்சி, புராண காலத்தை கண்முன் காட்டுகிறது. கருவறையில் வீற்றிருக்கும் ஆதி சிவலிங்கம். பசுபதிநாதர் என காமதேனு" என அழைக்கப்படும் பசு வழிபட்டதின் பொருள் பட அழைக்கப்படுகிறார். இவர் சற்று சாய்ந்த நிலையில் சூரிய கதிர்கள் தன்னை வணங்கும் பொருட்டு காட்சி அளிப்பதும், இவர் மீது பசுவின் கால் தடம் இருப்பதை காணலாம், கிழக்கு முகமாக லோகமாதா அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி அம்மையின் பொற்பாதத்தின் கீழ் சக்ர பீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தெற்கு சவுந்திரநாயகி புன்னகையுடன் வீற்றிருக்கிறாள். கரூர் மாவட்டத்தின். தலைநகரான கரூர் நகரில் ஏழு சிவ ஆலயங்களின் ஒன்றான புராணத் தொடர்புடைய அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் தோன்றிய மலையில் தெற்கு திருப்பதி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ராமன சுவாமி திருக்கோவில் மற்றும் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுவாமி, கோவில், ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் காவேரி கரையோரத்தில் சிறு குன்றின் மீது அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், மேலும் நெரூர் அருள்மிகு ஸ்ரீ சதாசிவமும் அருள் புரிகிறார். கரூர் சென்று" பசுபதீஸ்வரரை வணங்கினால் கர்ம வினை நீங்கும் என்பது திண்ணம்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்