சூரியனுக்கு குறி சொல்ல வந்த நாடோடி பெண் யார்?

Written by

in

சக்தியின் வடிவமான அம்பிகை, ஈசனுக்கு நிகராக திருவிளையாடல் புரிபவள். அகில நாயகியான இவள் வெவ்வேறு திருப்பயிர்களில் ஆங்காங்கே அம்பிகை பல்வேறு வடிவங்களில் திருவிளையாடல் குறித்து கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாவித்து வருவதை நாம் அறிந்துள்ளோம், அதேபோன்று பார்வதி தேவி குறி சொல்லும் நாடோடி பெண்ணாக வந்தபோது அவளை அலட்சியப்படுத்திய  சூரிய பகவான் தனது பிரகாசத்தை இழந்து அவன் மங்கிய கதையே"அறிந்து கொள்வோம் வாருங்கள்.

 
தேவலோகத்தில் ஒரு நாள், உமையவள்  குறி சொல்லும் நாடோடிப் பெண்ணின் வேடத்தில், குறி கேட்கிறாயோ" சாமி குறி கேக்குறியோ" கடந்த காலம்"நிகழ்காலம்"எதிர்காலம்" பற்றி புட்டு புட்டு வைக்கிறேன்" குறி கேட்கிறியோ"சாமி என கூறியவாறு  சென்றாள். அங்கு சூரியனிடம் சென்று, அவனின் எதிர்காலத்தை கணித்து, தருவதாக சொன்னால்,  ஆனால், வந்து தன் எதிரே நிற்பது, சக்தியின் வடிவமான  தேவி கருமாரி" என்பதை உணராத சூரியன், உமையவளை  உதாசீனப்படுத்தினான். இதனால்  கோபமடைந்த அம்பிகையின் சாபத்திற்கு ஆளான" சூரியன் தன் பிரகாசத்தை இழக்க தொடங்கினான்.

இதனால், அவனின் புகழ் குன்றியது. பின்தனது தவறை உணர்ந்து வருந்திய சூரியன் உமையவளை மனம் உருக பிரார்த்தனை செய்து, தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். தேவி கருமாரி அம்மன்  சூரியனின் பிரார்த்தனையால், மனம் இறங்கி அவனை மன்னித்து அருளினால்' அப்போது சூரியன் கேட்ட வரத்தின் படி,  ஞாயிற்றுக் கிழமையை தனக்கு  உகந்த நாளாக ஏற்று" அன்னை அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் கொண்டு, அமர்ந்த  இடம்தான் திருவேற்காடு,
திருமால் தனது தங்கையான, தேவி கருமாரி அம்மன் திருவேற்காட்டில் அருளாட்சி செய்வதை காண நேரடியாக வந்தார்.

அண்ணனின்  வருகையால் மனமகிழ்ந்த உமையவள்,  அவரைத் தனது இருப்பிடத்திலேயே, தெற்குத் திசை நோக்கி நின்றபடியே,  ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் புரியுமாறு வேண்டினால் பெருமாளும்,  தங்கைக்கு அளித்த வாக்கின்படி திருவேற்காட்டில், ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோலத்தில், தெற்குத் திசை நோக்கி நின்றபடியே, பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். 
 

ஆண்டுதோறும்  புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தில் சூரிய உதயத்தின் போது, சூரியனின் பொன்னிறக் கதிர்கள் அன்னையின்  தலையின் மீது பிரகாசிப்பதை
இங்கு காணலாம்,  இதன் காரணமாகவே" ஞாயிற்றுக்கிழமை அம்பிகைக்கு  உகந்த நாளாக, ஆனதின்  காரணம்'.இங்கு தேவி கருமாரியம்மன் கருவறையில் சுயம்புவாக காட்சி தருகிறாள். அம்பிகைக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள், விளக்கு பூஜை நடைபெறுகின்றன. இங்கு தேவி கருமாரியம்மன் புற்றுக்குள் சுயம்புவாக எழுந்து அருளியதால், மிகப்பெரிய புற்று ஒன்று உள்ளது. இங்கு மற்றொரு சிறப்பாக' மரச்சிலை அம்மன்” சன்னதி உள்ளது. தல விருச்சகம் வெள்வேலம், புனித தீர்த்தம் புஷ்கரணி, ஊர் முன்பு வேலங்காடு, திருவிழாக்கள், ஆடிப் பெருந்திருவிழா, தை மாதம் பிரம்மோற்சவம், மாசி மகம், நவராத்திரி, பௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அம்பிகை அருளும் இடம், அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு, பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்

பொன்.கோ.முத்து திருவள்ளூர்