தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் உள்ளன பெரும்பாலும் கிராமப்புறங்களில் காணப்படும் ஏரிகள் விளை நிலங்களின் பாசனம், குடிநீர், கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் பயன்பட்டு வந்தன தற்போது தொடர் மணல் கொள்ளை, தொழில் புங்க அமைத்தல், ஏரிகளை துரத்து வீட்டு மனை ஆக்குதல் போன்ற காரணங்களினால் ஏரி, குளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் ஆனது, குடியிருப்பு பகுதிகளை சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஏரி உடைப்பை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் ஒருவர் வைத்த கோரிக்கையை ஏற்று ஸ்ரீ ராமனே நேரடியாக வந்து ஏரியை காத்ததால் தற்போது அந்த இடம் ஏரி காத்த ராமர் என மதுராந்தகம் அழைக்கப்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள். மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரியானது சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கியது. கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தீர்த்து வந்த இந்த ஏரியா ஆனது வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது நீரின் ஓட்டத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, கிராமங்களுக்குள் வெள்ளை நீரானது சூழ்ந்து பொதுமக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தி வந்தது, மழை நீரை சேமித்து வைக்கும் இந்த ஏரியில், அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுக்க.
அப்போது நாட்டை ஆண்ட ஆங்கிலேய அரசு ஏரியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதனால் பலன் ஏதும் ஏற்படாததால், லயோனல் பிளேஸ், என்ற ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் ஏரிக்கரையைப் பலப்படுத்தப் பல முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் பலனேதும் ஏற்படவில்லை. இதனால் ஆழ்ந்த சிந்தனையோடு இங்குள்ள ராமர் கோயிலுக்கு வந்த ஆட்சியரிடம் அவரிடம், கோவில் அர்ச்சகர் அவரிடம் சீதாப்பிராட்டி தாயாருக்கு தனி சன்னிதி அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும், அப்போது மாவட்ட ஆட்சியரும் ராமரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். இனி வரும் காலங்களில் ஏரி உடைப்படாமல் காத்தால், கோவில் கட்டும் திருப்பணியை தானே ஏற்று நடத்துவதாக கோரிக்கை வைத்தார். மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கி வழக்கம் போல் ஏரி நிரம்பி வழிந்தது.
இந்தச் செய்தியை கேட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏரியை பார்வையிட ஆட்சியர் லயோனல் பிளேஸ் வந்தபோது அவரது கண்களுக்கு இளைஞர்கள் இருவர் கைகளில் வில்லில் அம்பு ஏந்திய நிலையில் இருப்பதை கண்டுள்ளார். மின்னல் ஒளியில் இதனைக் கண்ட ஆட்சியர், அவர்கள் வைத்திருந்த அம்பில் இருந்தும் மின்னல் ஒளி தோன்றியதைக் கண்டு மெய்சிலிர்த்து போனார்.
அதற்குப்பின் ஏரிக்கரை உடையவில்லை எனவே தான் கூறியபடியே ஆட்சியர் அன்னை சீதாப்பிராட்டிக்கு தனி சன்னிதி கட்டிக் கொடுத்தார் என கோவில் கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு பின் இங்குள்ள ஸ்ரீராமன் ஏரி காத்த ராமன் என அழைக்கப்படுகிறார்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்