இறைவன் ஆட்கொண்டு விட்டால் பக்தர்கள் அவனுக்கு தொண்டு புரிந்து பேர் ஆனந்தம் அடைவர் அவரவர் பொருளாதார நிலை, எண்ணங்களுக்கு ஏற்ப பாமாலை சுட்டுவது, பூமாலை தொடுத்து கொடுப்பது, ஆலயங்களை தூய்மைப்படுத்துவது போன்ற தொண்டுகளை புரிவது உண்டு, ஆனால் கொள்ளை அடித்து அதில் கோவில் கட்ட எண்ணிய மன்னன் வழிப்பறியில் ஈடுபட்டபோது திருமாலிடம், பிடிபட்ட கதையை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
காவேரி வலப்பகுதியான திருவாலி நாட்டின் திருக்குறையலூர் கிராமத்தைச் சேர்ந்த அல்லி நாட்டான் – வல்லித்திரு தம்பதியரின் மகனான" நீலன் கிபி ஏழாம் நூற்றாண்டு பிறந்தான். இளம் வயதிலேயே கல்வி கற்க பயின்று பல கலைகளும் கற்று'போர் வீர சாகச கலைகளிலும் தேர்ச்சி பெற்றான் நீலன். திருமங்கை கிராம தலைவனான இவனது ஆற்றலை அறிந்த எட்டிக் கடம்பன் சோழ முத்தைரயன் அரசன் அவனை தனது சேனாதிபதியாக நியமித்தார், பின் நடைபெற்ற பல்வேறு போர்களில் வெற்றியடைந்த முத்தைரயன் அரசன் நீலனை கௌரவிக்கும் வகையில், அவனை ஆலிநாட்டிற்கு அரசனாக நியமித்து எதிரிகளுக்கு காளானாக விளங்கியதால், பரகாலன் என்ற பட்டத்தையும் வழங்கினான். இதன் காரணமாக' நீலனை நாட்டு மக்கள் திருமங்கை மன்னன் என அழைத்தனர்.
பின்னாளில் திருமங்கை மன்னன்" குமுதவல்லி என்ற பெண்ணை மணந்தார், திருமாலின் பக்தையான இவருடைய மனைவி குமுதவல்லி திருமணத்தின் போது, ஒரு நிபந்தனை வைத்து, திருமாலுக்கு திருக்கோவில் கட்ட வேண்டும், தினமும் 1008 வைணவர்களுக்கு விருந்து அளிக்கும்படி வேண்டினார், அரசியின் விருப்பப்படி திருமங்கை மன்னன் திருத் தொண்டர் களுக்கு நாள்தோறும் அமுது படைத்தும், மற்றொரு புறம் கோவில் திருப்பணிகை மேற்கொண்டும் வந்தான். இதனால் அரசு கருவூலத்தில் இருந்த தனது அனைத்து செல்வங்களையும் இழந்து, அடியார்களுக்கு உணவளிக்க வழி இன்றி திருமங்கை மன்னன் தவித்தான். இருந்த போதும் எப்போதும் போல், உணவு அளிக்க முடிவு செய்து, செல்வந்தர்களிடமும், பக்கத்து நாடுகளுக்குச் சென்று பொன், பொருள்களை கொள்ளை அடித்து கொண்டு வந்து வழக்கம்போல் உணவளித்து வந்தான்.
திருமங்கை மன்னன் தவறான வழியில் தனது அடியார்களுக்கு துண்டு புரிவதை விரும்பாத திருமால், ஒரு நாள் வனப்பகுதியில் கொள்ளையடிக்கும் நோக்கோடு, தனது கூட்டத்துடன் திருமங்கை மன்னன். பதுங்கி இருப்பதை அறிந்து, கொள்ளையை தடுக்கும் நோக்கோடு' திருமால் தானே தன் தேவியருடன் மானுட ரூபம் எடுத்து ஏராளமான தங்க, வைர, வைடூரிய அபகரணங்களை அணிந்துகொண்டு திருமண கோலத்தில் இரட்டை மாட்டு வண்டிகளில் சுற்றம் சூழ கூட்டமாக அவழியாக வந்தார், திருமங்கை மன்னன் திருமண கோஷ்டியை கண்டதும் ஆயுதங்களுடன் அவர்களை சுற்றி வளைத்து, அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி தருமாறும் மறுத்தால் கொன்று விடுவதாகவும்" மிரட்டினான். இதனால் அச்சமடைந்த திருமண கூட்டத்தினர், தங்கள் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்தனர்.
அப்போது மணமகன் ஆகிய திருமாலின் வலது காலின் ஒரு விரலில் மட்டும் வைரக்கல் பதிக்கப்பட்ட மெட்டி அகற்றப்படாமல் இருந்ததை கண்டு அதையும் கழற்றிக் கொடுக்க வற்புறுத்தினார். மாப்பிள்ளை வேடத்தில் இருந்த திருமால் இந்த மெட்டியை கழற்றி இயலவில்லை என்றார், திருமங்கை மன்னன் அதனை தன் பற்களால் மாப்பிள்ளையின் விரலில் இருந்து கடித்து கழற்ற முயன்றான் முடியவில்லை, பிறகு வழிப்பறி செய்த பொருட்களை மூட்டையாக கட்டி தூக்கிச் செல்லும் முயன்றனர், அவர்களால் அதை நகர்த்த கூட முடியவில்லை, இதனால் கோபம் கொண்ட திருமங்கை மன்னன்' மணமகனை நோக்கி, மூட்டையை தூக்க முடியாமல் நீ ஏதோ மந்திர தந்திர வேலையை செய்து விட்டாய். அந்த மந்திரத்தை சொல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என கர்ஜித்தான்.
மாப்பிளை (திருமால்) என் அருகில் வா அந்த மந்திரத்தை கூறுகிறேன் என்றார், திருமங்கை மன்னனும் திருமால் அருகே சென்றான். எம்பெருமானாகிய இறைவன், அவரது காதில், "ஓம் நமோ நாராயணா" என்ற திருமந்திரமான திருவெட்டெழுத்தை உபதேசித்தார். அதைக் கேட்ட "திருமங்கை மன்னனின் அகக்கண் திறந்தது தாயினும் இனிய அன்பின் வடிவமான நலம் தரும் சொல்லை நான் அறிந்து கொண்டேன்" என இறைவனுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி திகைத்து நின்றார். மணப்பெண் கோலம் பூண்டிருந்த மகாலட்சுமியும் கருணை பொழியும் திரு கண்களால் திருமங்கை மன்னனை பார்த்து அருளினால், பிறகு தோன்றிய இறைவனும் இறைவியும் சுற்றத்தாறுடன் மறைந்து விட்டனர்.
இந்நிகழ்வுக்குப் பின் திருமங்கை மன்னனுக்கு ஞானத் தெளிவு பிறந்தது உள்ளத்தில் பேரொலி எழுந்தது உடன் திருமாலை நோக்கி பாசுரங்கள் பாடத் தொடங்கினார்.
"வாடினேன் வாடினேன் மனத்தாற்
பெருந்துயர் இடும்பையிற் பிறந்து
கூடினேன், கூடி இளையவர் தம்மோடு"
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன், உயவதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன், நாடி நான் கண்டு கொண்டேன்நாராயணா என்னும் நாமம்"
என நாராயணனை பாடி பல்வேறு பல்வேறு இடங்களுக்கு சென்று திருமாலின் மீது பாசுரங்களை பாடி எம்பெருமானின் அருளால் திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வார் என போற்றுதலுக்கு உள்ளாகி அரங்கனின் திருப்பாத கமலத் திருவடியில் சேர்ந்தார் என்பதே" திருமங்கை மன்னன் வழிப்பறியில் ஈடுபட்டு திருமால் இடம் சிக்கிய புனித வரலாறு ஆகும்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்