மகா சிவராத்திரி எப்படி உருவானது? புராண காலத்தில் உலகம் பிரளயம் ஆன போது, அதில் இருந்த உயிரினங்கள் அவையும் தேடி" சிவபெருமானிடம் சென்றன. இதனால் உலகம் செயலற்று போனது. இதனைக் கண்ட, அன்பின் வடிவமான உமையவள் உலகம் மீண்டும் இயங்குவதற்கும், உயிரினங்கள் இன்புற்று வாழ்வதற்காகவும் கடும் தவம் செய்தால், அன்னையின் தவக்கோளத்தை கண்ட சிவபெருமான் அப்போது, மீண்டும் உயிரிகளை உயிர்களை படைத்து ஆட்கொண்டார்.
எம்பெருமானின் அருளால்.உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. உமையவள் சிவனை நோக்கி விரதம் இருந்து வழிபட்ட அந்நேரத்தில் அனைத்து உயிரினங்களும் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டன. அந்த நாளை சிவராத்திரி ஆகவும் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் மகா சிவராத்திரி விரத வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று முக்தி அடைய வேண்டும் என உமையவள் வேண்டி ஈசனிடம் வரம் பெற்றமையால், நந்தி தேவர், சனாகதி முனிவர் உள்ளிட்ட முக்கோடி தேவர்களும் மகா சிவராத்திரி விரதம் இருந்து நற்பலன்களை பெற்றதாக பல்வேறு புராண கதைகள் வெவ்வேறு வடிவங்களில் கூறுகின்றன.
அன்றைய நாள் முதல் பல யுகங்களாக இந்த மகா சிவராத்திரி தினத்தை தற்போது வரை தேவர்களும், மாமுனிகளும், கந்தவர்களும் கடைப்பிடித்து வருவதாக ஐதீகம்,மகா சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்தது முதல் மறு தினம் சூரியன் உதயமாகும் வரை சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் என்பது திண்ணம். ஐதீகமாகும்.மகா சிவராத்திரி அன்று அன்று தேவாரம், திருவாசகம், திருமுறைகள் மற்றும் சிவபுராணம் படிப்பது மிகவும் சிறப்புடையதாகும், மகா சிவராத்திரி திருநாள் அன்று சிவபெருமானுக்கு'பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், திருநீர் ஆகியவற்றை கொண்டு பக்தியுடன் நாளை எங்களுக்கு சென்று அபிஷேகம் செய்ய வேண்டும், இதனால் லிங்க வடிவான சிவபெருமான் ஆனந்தம் அடைந்து அருளை அள்ளி வழங்குவார், அன்பே சிவம்" அவன் அருளே" பெரும் செல்வம்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்