Tag: yagam for rain

  • yagam for rain

    சென்னை போரூரில் உலக நன்மைக்காகவும்,மழை வேண்டியும் காளி பகவதி அம்மன் ஆலயத்தில் பால் அபிஷேகம்  நடைபெற்றது.

    சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ளது ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம்.இங்கு அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அருள் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்காக  சிறப்பு பூஜைகளை செய்துள்ளார்.இந்த நிலையில் உலக நன்மைக்காகவும்,மழை வேண்டியும் பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன.

    இந்த ஆலயத்தின் பூசாரி கூறுகையில் இன்னும் பதினைந்து நாட்களில் தமிழகத்தில் மழை பெய்யும் என்று அருள் வாக்கு கூறி உள்ளார்.இதற்காக தினம் தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருவதாகவும்,கடும் தவம்  இருப்பதாகவும் தெரிவித்தார்.