Tag: Why do Saptha Kannyar (the virgins of the sound) enjoy the blessings of the Boovarakperumal (the abode of Lord Buddha)?

  • Why do Saptha Kannyar (the virgins of the sound) enjoy the blessings of the Boovarakperumal (the abode of Lord Buddha)?

    கடலூர் மாவட்டம்,ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பூவராகசாமி திருக்கோவில் உள்ளது. திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரமாக விளங்குவது வராக அவதாரம். இவர் பூவராக மூர்த்தியாக இங்கு' அருள் பாவிக்கிறார். இரணியன் என்ற அசுரன் தேவர்கள், முனிவர்கள், நந்தவர்களை துன்பப்படுத்தி வந்ததோடு, நான்கு வேதங்களை எடுத்துச் சென்று பூமியை பாயாக சுருட்டி இருள் அடைய செய்து அதன் கீழ் ஒளிந்து கொண்டான். அப்போது. தேவர்கள் முனிவர்கள் கந்தவர்கள் ஆகியோருடன். அப்பகுதியைச் சேர்ந்த 'அம்புஜவல்லி தாயார். அவருடைய உயிர் தோழிகளான சப்த கன்னிகளும் திருமால் இடம் சென்று' இரணியனை அழித்து தங்களை காக்கும் படி வேண்டினர்.

    எனவே  திருமால் வழக்கமாக  நான்கு கரங்கள், சக்கரத்துடன்' தான் சென்றாள். இரணியன் தன்னைக் கண்டு அஞ்சி தாழ் பணிந்து உயிர் தப்பி விடுவான் என்பதால்'  பன்றி அவதாரம் எடுத்து மண்ணுக்குள் நுழைந்து சென்று திருமால் இரணியனை  கொன்ற பின் அம்புஜவல்லி தாயாரை திருமணம் செய்து கொண்டார். அப்போது அம்புஜவல்லி தாயார் தனது தோழிகளும்  தன்னுடனே இருக்க வேண்டும் என்ற ஆசையில் திருமாலிடம் வேண்டினார். இதனை ஏற்றுக் கொண்ட திருமால்  தனது இருப்பிடத்திலேயே  அவர்களுக்கு இடமளித்தார்.

    மேலும் அத்துடன் அவர்களுக்கு தோஷம் நீங்குதல், பிள்ளை பேரு வரம் வழங்குதல் போன்ற சக்திகளையும் வழங்கினார். தற்போதும் ஏழு சப்த கன்னியர்களும்' பூவராகசாமி கோவிலில் தங்களுக்கான சன்னதியில், வடக்கு நோக்கி அமர்ந்தபடி திருமாலின் அனுமதியோடு' அங்கு வரும் பக்தர்களுக்கு வரம் அளித்து வருகின்றனர். இறைவன், அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி, (சுயம்பு மூர்த்தி) தாயார், அருள்மிகு ஸ்ரீ அம்புஜவல்லி, விமானம், பாவன விமானம்.புனித தீர்த்தம், நித்ய புஷ்கரணி,தலவிருட்சம், அரச மரம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்