Tag: who incurred the wrath of his brother-in-law Shiva when he came to visit his sister

  • சிவனின் கோபத்திற்கு ஆளான மகாவிஷ்ணு! நடந்தது என்ன ?

    வழக்கமாக பெண்கள் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு சென்றவுடன்"தனது தாய் வீட்டில் இருந்து பெற்றவர்களோ"அல்லது உடன் பிறந்தவர்களோ" தன்னைக் காண வந்துவிட்டால், அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அப்படி ஒரு முறை தனது சகோதரியான பார்வதி தேவியை பார்ப்பதற்காக அவரது புகுந்து வீட்டிற்கு மகாவிஷ்ணு'சென்றபோது தனது மைத்துனன் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளான" கதை என்ன தெரியுமா ? அடுத்தவர் வீட்டு கதை என்றாலே"நமக்கெல்லாம் அல்வா சாப்பிடுவது போன்று" அதுவும் சிவபெருமான் விட்டு கதை என்றால் கேட்க சொல்லவா வேண்டும்" வாருங்கள் என்ன நடந்தது என தெரிந்து கொள்ளலாம்,
    திருக்கைலாயத்திற்கு ஒருமுறை தனது சகோதரி பார்வதி தேவியை பார்ப்பதற்காக மகாவிஷ்ணு சென்றார், அப்போது அவரை சிவபெருமானும் பார்வதி தேவியும் வரவேற்று தடபுடலான விருந்திருக்கு ஏற்பாடு செய்து உபசரித்தனர்.

    பின் விருந்து முடிந்ததும் மகாவிஷ்ணு, சிவபெருமான், இருவரும் பார்வதி தேவியை நடுவராக கொண்டு, சொக்கட்டான் ஆடிய போது, காய் உருண்டோடியது நடுவரான பார்வதி தேவி தனது சகோதரனான மகாவிஷ்ணுவுக்கு சாதகமாக ஒரு தலை பட்சமாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த  சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாறும்படி சாபம் இட்டார்.

    அப்போது பார்வதி தேவிக்கு துணையாக லட்சுமி தேவியும், தகவல் அறிந்து, பிரம்மலோகத்தில் இருந்து சரஸ்வதியும் புறப்பட்டு பார்வதி தேவியுடன் பசுவாக மாறி பூலோகம் வந்தடைந்தனர், சகோதரியை காண வந்த இடத்தில் தனது விளையாட்டால் மைத்துனன் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானதை, எண்ணி வருத்தம் அடைந்த மகாவிஷ்ணு" மருவியப்பன் எனும் பெயர் கொண்டு மாடு மேய்ப்பானாக' பூலோகம் வந்த இடம்தான். திருவழுந்தூர் என்ற தேரழுந்தூர் அருள்மிகு ஸ்ரீ சவுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில் ஆகும், தல விருச்சகம், வில்வம், சந்தனம், புனித திருத்தம், வேதாமிர்த  தீர்த்தம், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி வணங்கிய இறைவனின் இருப்பிடம் தேரழுந்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்