Tag: vinayakar slogam

  • vetri tharum vinayakar slogam

    விநாயகர் சகஸ்ரநாமம்:
     
    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

    விநாயகர் காயத்ரி மந்திரம்:
     
    வக்ரதுண்டாய ஹீம் 
    ஓம் நமோ ஹேரம்ப மதமோதித 
    மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 
    ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
     
     விநாயகர் ஸ்லோகங்கள்….

    1)  கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
     
    2) ஓம் தத்புருஷாய வித்மஹே 
    வக்ரதுண்டாய தீமஹி 
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
     
    3) ஐந்து கரத்தனை யானை முகத்தனை 
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
    நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
     
    4) மூஷிக வாகன மோதக ஹஸ்த 
    சாமர கர்ண விளம்பித சூத்ர 
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
    விக்ன விநாயக பாத நமஸ்தே.
     
    5) அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த 
    தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல 
    குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் 
    கணபதியைக் கைதொழுதக் கால்.
     
    விநாயகர் மந்திரத்தை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.

  • Sangadangali Theerkum vinayakar slogam

    பிறப்பிலேயே சகல ஞானங்களையும் பெற்ற கணபதிக்குக் குரு என்று எவருமே இல்லை. அவரே ஞான உருவானவர். அதனால்தான்  கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும் எல்லாக் குழந்தைகளுக்கும் கணபதி அருளுகிறார்.

    தன்னை நாடி வரும் பக்தர்களின் செல்வநிலையை உயர்த்தி, அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அருளும் கற்பகத் தருவாக, பிள்ளையார்பட்டியில் கோயில் கொண்டிருக்கும் கற்பக விநாயகர், யோக கணபதியாக திருமகளின் அம்சம் கொண்டு அருள்கிறார்.

     சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை,
    'மூஷிக வாகன மோதக ஹஸ்த 
    சாமர கர்ண விளம்பித சூத்ர 
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
    விக்ன விநாயக பாத நமஸ்தே…’

    என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கினால் எல்லாச் சங்கடங்களும் நீங்கி, சகல சௌபாக்யங்களையும் பெறலாம்.