Tag: Varahi

  • Sri Varahi mandiram

    துடியான தெய்வமே வராகி அன்னையே திருவடிகள் சரணம்

    திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)

    பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற

    மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)

    இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை

    நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.

    பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

    தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து

    நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்

    மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு

    கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.

    சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

    நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்

    அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே

    ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி

    எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.

    நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)

    வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று

    காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்

    பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்

    கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.

    நிறைமங்கலம் (சிவஞான யோகம்)

    சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்

    தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை

    அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு

    நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

    கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||

    துடியான தெய்வமே வராகி அன்னையே திருவடிகள் சரணம்
     

  • Varam tharum varahi thudhi maalai

    வரம் பொழிதல் (எதிரி மாரணம்)

    தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
    மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
    கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
    வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

     வாழ்த்துதல் (உலக மாரணம்)

    வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
    பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
    பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
    விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.

     நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)

    வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
    கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
    சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
    மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.

     புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)

    பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
    ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
    கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
    ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.

     மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)

    தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
    சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
    வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
    தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.

    தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)

    ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
    கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்
    சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
    வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.

    தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

    தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
    பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
    நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
    உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே
     

  • A Chant to conquer all sufferings in life

    This all powerful mother with the face of Varaha is considered to be the chief confidant of Ma Parasakthi. She was brought into existence by Ma Parasakthi by combining the Varaha power of Lord Vishnu and the power of Lord Shiva's third eye. Therefore, Varahi Devi has three eyes like Lord Shiva.

    Varahi Devi is also seen as a trio of Shiva, Vishnu and Parasakthi. She is very different from the Sapta Kanni guardians. This mother has the strength of animals and divinity of the Trinity.

    The chant in her honour is full of energy to empower those who worship her to overcome all hurdles.

    ‘Om Shyamalaai Vidmahe
    Hala Hastaai Thimahi
    Tanno Warahi Prasodayath '

    Reciting this mantra for 108 times a day is believed to rid one from all sufferings in life.

  • Varahi Mandiram

    வராஹ முகத்தோடு இருக்கும் இந்த அன்னை, பராசக்தியின் முக்கிய மந்திரியாக திகழ்பவள். இவள் விஷ்ணுவின் வராஹ அம்சமாக தோன்றியவள். இவளுக்கு ஈசனைப் போல மூன்று கண்கள் உண்டு. தவிர அம்பாளிடம் இருந்து உருவானவள். எனவே இந்த வராஹி தேவி, சிவபெருமான், திருமால், பராசக்தி ஆகிய மூவரின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். சப்த கன்னியர்களில் மிகவும் வேறுபட்டவள். மிருக பலமும், தேவ குணமும் கொண்ட இந்த அன்னை, தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களை அகற்றும் ஆற்றல் நிறைந்தவள்.

    ‘ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.