Tag: Varahi amman

  • Varahi amman abishegam

    தேனியில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீப ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வராகி அம்மனை தரிசித்தனர்.

    தேனி நகரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் 3 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பத்து நாள் நவராத்திரி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வராகி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வருகிறது.

    ஆசாட நவராத்திரியின் முக்கிய நாளான இன்று வராகி அம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றன. பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகப் பொருட்கள் கொண்டு வராகி அம்மனுக்கு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து பெண்கள் வராகி அம்மனுக்கு வழிபாடு நடத்தி ஆரத்தி எடுத்தனர். பின்னர் வராகி அம்மனுக்கு புஷ்ப மலர்களாலும் வண்ண மலர் மாலைகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பச்சை புடவை உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் வராகி அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆஷாட நவராத்திரி முன்னிட்டு வராகி அம்மனை தரிசித்துச் சென்றனர்.

  • Varahi amman mandiram

    வராகி அம்மன் மூல மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், எதிரிகளின் தொல்லைகளும், எதிர்வினைகள், தீய சக்திகளின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். 
        
    நம் வாழ்வில் பல கஷ்டங்கள் நம் செயலால் ஏற்படுகின்றது. நம் வினைகளாலும், நாம் தற்ப்போது செய்து வரும் தவறான செயல்களால் பிரச்னைகளிலும், துன்பங்களிலும் சிக்கித் தவிக்கின்றோம்.

    பலர் இதன் மூலம் எதிரிகளால் தொல்லைகளும் அனுபவிக்கும் நிலை இருக்கும். இப்படி எதிரிகளால் தொல்லைகளை அனுபவிப்பவர்கள் வராஹி அம்மனை வழிபடுதல் அவசியம்.

    வராகி அம்மனை வழிபடுவோருக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. பக்தர்களை காப்பதில் சாந்த ரூபியாக, தாயாக இருக்கும் வராகி அம்மன், அவர்களின் எதிரிகளை அழிக்க ருத்ர அவதாரம் எடுப்பாள்.

    தீய வழியில் செல்லும் கணவன் திருந்தி வாழ செய்வது எப்படி?

    எதிரிகளின் தொல்லைகளால் கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் வராகி அம்மனின் மூல மந்திரத்தை தினமும் ஜெபம் செய்து வர அவளின் அருள் கிடைக்கும்.

    மஹா வராஹி மூல மந்திரம்:

    ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
    ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாக

    பூஜை முறைகள் :
    வராஹி அம்மனை வழிபடுபவர்கள் வெள்ளை மொச்சைப் பருப்பை வேக வைத்து அதனுடன் தேன் மற்றும் நெய்யை கலந்து நைவேத்தியமாக படைத்து வழிபட்டு வர வேண்டும்.

    தினமும் வராகி அம்மனை வழிபட்டு வருவதால் எதிரிகளின் தொல்லை நீங்கும், அதோடு தன வசியம் ஆகும், தொழில், வியாபாரம் விருத்தி அடைந்து செழிக்கும்.

    வராகி அம்மனை வழிபட பஞ்சமி திதி மிகச்சிறந்ததாகும். பஞ்சமி திதி அன்று வராஹி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபடுவதால் செல்வங்கள் உங்களை தேடிவரும். பிரச்னைகள் விலகும்.