Tag: Thursday

  • The vision of Garuda and its benefits!

    புராணங்களின் படி, கருடன் தரிசனம் ஆன்மீகத்தில் சிறந்த பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் கருடனை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்த ஆர்வம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை தரிசித்தால் உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், பலர் ஞாயிறு அன்று கோவில்களில் பிரார்த்தனை செய்கின்றனர். திங்கட்கிழமை தரிசனம் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நலத்தை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை கருடனை தரிசிப்பது துணிவையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்று இளைஞர்கள் கருதுகின்றனர்.

    புதன்கிழமை தரிசனம் பகைவர்களின் தொல்லைகளை அகற்றும் என்று பலரும் நம்புகின்றனர். வியாழக்கிழமை கருடனை தரிசிப்பது நீண்ட ஆயுளை வழங்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை தரிசனம் செல்வ வளத்தையும், லட்சுமி கடாட்சத்தையும் பெறுத்தரும் என்பதால், பக்தர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சனிக்கிழமை கருட தரிசனம் முக்தியை அளிக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கிறது.

    தமிழகத்தின் பல பெருமாள் கோவில்களில், குறிப்பாக திருநள்ளாறு, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் கருடாழ்வார் சந்நிதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த பதிவுகள் வைரலாகி, பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆன்மீக விவாதங்களில், கருட தரிசனத்தின் முக்கியத்துவம் பற்றி பலர் விளக்கமளித்து, இதன் பலன்களை எடுத்துரைக்கின்றனர்.

     

  • Thursday Slogan

    விநாயகர் ஸ்லோகம்
    ஓம் கணாநாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே
    கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம்
    ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மனாம் ப்ரஹ்மணஸ்பத
    ஆந ஸ்ருண் வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்!
    ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ

    “அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
    தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
    குணம் அதிக மாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
    கணபதியைக் கைதொழுதக் கால்.”

    முருகன் ஸ்லோகம்
    அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் ‘அஞ்சல்!’ எனவேல் தோன்றும் – நெஞ்சில்
    ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
    ‘முருகா!’ என்று ஓதுவார் முன்.”

    சிவன் ஸ்லோகம்
    பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
    பிள்ளை யைப்பெறும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே

    அம்பாள் ஸ்லோகம்
    ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
    பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
    காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்புவில்லும்
    சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

    மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    விஷ்ணு ஸ்லோகம்
    வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
    தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    ராகவேந்திரர் ஸ்லோகம்
    ஸ்ரீ பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே.

    ஆஞ்சநேயர் ஸ்லோகம்
    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டுஅயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

    நவக்ரஹம்: வியாழன்
    குணமிகு வியாழ குரு பகவானே
    மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்
    பிரகஸ்பதி வியாழ குருபர நேசா
    கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!

  • The infinite power of healing is in your own mind

    All of us in the modern world have become host to ailments. While the sickness itself is not the enemy, the feeling of pain is. Sai says that this feeling of pain is an expression of your own mind.

    When a person is suffering from health problems, his enemy is but, the fear of not being cured. This fear gradually branches out into worries about family, career being effected and financial problems. It is no rocket science that this compounding fear becomes the root cause of failing health.

    FAITH is the answer to such ailments. With faith it is possible to over come fear and worries. This faith transcends into love for the almighty. This invisible thing called love deviates mind from pain.

    It is worth remembering that even modern science speaks about patients' strong will helping in speedy recovery!

    Our Sai preaches Shradha and Saburi – devotion and patience! For this, the foundation is faith. In Swami Vivekananda's words, "Faith, faith in ourselves, faith, faith in GOD! This is the secret of success!"

    Our Gurus in astral form are here to help you heal. In all your efforts to get better, have faith, devotion and patience.

    Om Sai Ram!

  • Thursday Saibaba Viradham

    எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிராதித்துக் கொள்ள வேண்டும் காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். 

    இந்த விரதத்தை பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது

    பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்கள் மாலை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை வணங்கவும். முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். 

    வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும். விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யலாம் ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.

  • Feb 14 Thursday

    பிப்ரவரி 14 – வரம் தரும் வியாழன்
    விளம்பி வருடம் – மாசி 2
    14-பிப்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    நவமி    கா    10.08
    நட்சத்திரம்    :    ரோகிணி    மா    5.41
    யோகம்    :    மரண யோகம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்