Tag: Thudhi

  • Vinayakar Thudhi

    விநாயகர் – பாலும் தெளிதேனும் 

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
    இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
    கோலம் செய்துங்க  கரிமுகத்து தூமணியே
    நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!

    பொருள்:

    பாலையும், கலப்படம் அற்ற தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேகவைத்த கடலை பருப்பையும் கலந்து ஒரு சுவையான உனக்கு நான்  நைவேத்தியமாக படைக்கிறேன்.
    கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க  (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூய்மையான மணி போன்ற பொக்கிஷமே! நீ எனக்கு இயல், இசை, நாடகம் என முப்பரிமாணத்தில் மிளிரும் தமிழ் மொழியை அருள்வாயாக !