Tag: Thiruvizha

  • Nellaippar Koil Ippasi Thiruvizha

    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கி இருக்கிறது. 

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5-30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா சுற்றி வந்தார்.

    இதைத்தொடர்ந்து அம்பாள் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் காலை 7-30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர். இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

     4-ஆம் திருவிழாவான வருகிற 18-ந் தேதி காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் காந்திமதி அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் வீதிஉலாவும் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 21-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள் தந்த பல்லக்கு வாகனத்தில் தவழ்ந்த திருக்கோலத்திலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 

    22-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் பச்சை சாத்திவீதி உலாவும், இரவு 8 மணிக்கு கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 

    23-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள், செப்பு தேரில் பவனியும், இரவு 8 மணிக்கு தந்தப்பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. 

    24-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாளுக்கு தங்க பல்லக்கில் தீர்த்தவாரியும், இரவு 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கு அம்மாள் தவக்கோலத்துடன் தங்கசப்பரத்தில் கம்பை நதிக்கு எழுந்தருளுகிறார்.

    25-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 8-30 மணிக்கு சுவாமி ரி‌‌ஷப வாகனத்தில் அம்பாளுக்கு காட்சி கொடுக்க கோவிலில் இருந்து எழுந்தருளலும், 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் ரி‌‌ஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் வைபவமும் நடக்கிறது.

    26-ந்தேதி அதிகாலை 4-30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது. 

    26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஊஞ்சல் திருவிழா நடக்கிறது. 29-ந்தேதி இரவு சுவாமி, அம்பாள் ரி‌‌ஷப வாகனத்தில் மனுவீடு பட்டணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது.

  • Samayapuram Mari amman Koil thiruvizha

    நிறைவு நாளில் அம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்ககு அருள்பாலித்தார்.       திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 16 ந்தேதி சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். அதன் தொடர்ச்சியாக அம்மன் காமதேனு வாகனம், முத்து பல்லக்கு,தெப்பத்தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்நிலையில் சித்திரை தேரோட்டத்தின் நிறைவு  நாளான  இன்று மாலை அம்மனுக்கு அபிஷேகம் கண்டருளி இரவு  தங்க கமல வாகனத்தில் வீதி் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து மூலஸ்தானம் சென்றடைந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    இவ்விழாவினை  கோயிலின் இனை ஆணையர் அசோக்குமார், அலுவலக பணியாளர்கள்,கோயில் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
     

  • Kunrakudi ThaiPoosa Thiruvizha

    குன்றக்குடியில் தைபூச தங்கரதம்  சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதன் கோவிலில் தைபூச திருவிழா நடைபெற்று வருகிறது 6 ஆம் திருநாளான இன்று சண்முகநாதப் பெருமான் அலங்காரமாகி தங்கரதத்தில் நான்கு வீதியில் வலம் வந்தார் குன்றக்குடி ஆதீன மடத்தின் சார்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.