Tag: Thirupathyil

  • Thirupathyil VIP Dharisanam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித சிபாரி கடிதமும் இல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி அறிவித்துள்ளார். 

    நாடு முழுவதும் வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் கட்டுவதற்கும், கோவிலை பாதுகாக்கவும் , புனரமைக்க , தூப தீப நைவேத்தியம் செய்வதற்கு, அர்ச்சகர்களின் நிதி உதவி வழங்குவதற்கும், இந்து தர்ம பிரச்சாரத்திற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

    இந்த அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமென்றாலும் பக்தர்கள் நன்கொடை வழங்கலாம். இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களை ஊக்குவிக்கும் விதமாக ரூபாய் 10,000 முதல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஒரு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி விஐபி தரிசனத்திற்கான 500 ரூபாய் டிக்கெட் கொடுத்து பக்தர்கள் பெற்று தினந்தோறும் காலையில் நடைபெறக்கூடிய விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம். 

    இது போன்று ஒரு பக்தர்கள் 10,000 முதல் 99 ஆயிரம்  ரூபாய் வரை நன்கொடை வழங்கி ஒன்பது டிக்கெட்டுகள்  வரை பெறலாம் ஒரு லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை, 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 10 லட்சத்திற்கும் மேல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஏற்கனவே உள்ள அறக்கட்டளைக்கு  நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உள்ள முன்னுரிமை தரிசனம் செய்து வைக்கப்படும் என்றும் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியுள்ளார்.

    ஒரு லட்ச ரூபாய்க்கு உட்பட்டு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் இல்லாத நிலையில் தற்போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் நேரடியாக திருமலையில் வந்து பத்தாயிரம்  ரூபாய் நன்கொடை டெபிட் கார்டு மூலமாகவும், பணமாகவும் செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். விரைவில் ஆன்லைன் மூலமாகவும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை செலுத்தி வி.ஐ.பி. டிக்கெட் பெறும் விதமாக செய்யப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.

  • Venpattu Kudaigal Thirupathyil Oppadaipu

    சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 11 வெண்பட்டு குடைகள் திருப்பதி கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    திருப்பதி கோவில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டியிடம் இந்து தர்மார்த்த சமீதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வழங்கினார்.

    சென்னையில் கடந்த 28-ந் தேதி தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று மாலை திருப்பதி திருமலையை வந்தடைந்தது.  வெண் பட்டு குடைகளுடன் பட்டுவஸ்திரங்கள், பழங்கள், மஞ்சள் உள்ளிட்ட மங்களப்பொருட்களும் மேளதாளத்துடன் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு  ஏழுமலையான் கோயில் முன்பு  இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஏழுமலையான் கோயில்  கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டியிடம்  சமர்ப்பித்தார். 

    அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுசலர் ஹரிந்திரநாத், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.  முன்னதாக, நேற்று திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 2 வெண்பட்டுக்குடைகள் இந்து தர்மார்த்த சமிதி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டன. 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து பல ஆண்டுகளாக  வழங்கப்பட்டு வரும் மங்களப்பொருட்களில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் மாலைகளும், சென்னையில் இருந்து இந்து தர்மார்த்த சமிதி சார்பில் வழங்கப்படும் வெண்பட்டுக்குடைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

    எனவே இந்து தர்மார்த்த சமிதி சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வெண்பட்டு குடைகள் கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சமர்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 28 -ந் தேதி சென்னையில் இருந்து இந்த திருக்குடைகள் ஊர்வலம் புறப்பட்டதில் இருந்து திருமலை வரும் வரை சுமார் 20 லட்சம் பக்தர்கள் இந்தக் திருக்குடைகளை பெருமாளின் அம்சமாகவே கருதி பயபக்தியுடன் வழிபட்டனர். இந்த குடைகளுடன் தமிழக மக்களின் பிரார்த்தனைகளையும் சமர்ப்பித்ததாக எண்ணி பெருமை கொள்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.