Tag: Thirupathy Rush

  • Thirupathy Rush

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. சாமி தரிசனம் செய்வதற்காக வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி இன்று காலை 6 மணி நிலவரப்படி செங்குமிட்டா காட்டேஜ் வரை உள்ள வரிசையில் பக்தர்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் காத்திருந்தனர். 

    நேற்று இரவு திருமலையில் பலத்த மழை பெய்த நிலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெளியே கூட செல்ல முடியாத நிலையில் மழையிலேயே வரிசையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் காத்திருந்தனர்.  சனிக்கிழமையான நேற்று காலை சுப்ரபாத சேவை முதல் இரவு 12 மணி வரை 90 ஆயிரத்து 25 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    நேற்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை 3.23 கோடி ரூபாய் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இன்று சாமி தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவச தரிசனத்தில் 24 மணி நேரமும், 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்களுக்கு நான்கு மணி நேரமும் , ஆதார் அடையாள அட்டையின் மூலம்  சர்வ தரிசனம்  டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஏழு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
     

  • Thirupathy Rush

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறையின் காரணமாக சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் 26 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

     வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி சுமார் 3  கிலோ மீட்டர் தூரத்திற்கு  சந்திப்பு வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் காரணமாக பக்தர்கள், தங்கும் விடுதிகள் கிடைக்காமல் பூங்காக்களில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால், தயிர்சாதம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

    கூட்டம் காரணமாக இலவச தரிசனத்திற்கு 26 மணி நேரம் ஆனது. இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள், திருமலை முழுவதும் உள்ள விடுதிகளுக்கு சென்று முன்பதிவு செய்த பக்தர்களிடம் கூட்டம் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரத்திற்குள் அறைகளை காலி செய்யும்படி கேட்டுக்கொண்டனர். 

    300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்து வந்த பக்தர்கள் தரிசனத்திற்கு 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். ஆதார் அட்டை மூலமாக நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற சர்வ தரிசனம் பக்தர்கள், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து சென்று திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனத்திற்கு சுமார் 6 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.