Tag: Thirupathiyil

  • Thirupathiyil Krishna Jayanthi

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி வழுக்கு மரம் ஏறும்  உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 


    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மதியம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஒரு பல்லக்கில், ஸ்ரீகிருஷ்ணர்  மற்றொரு பல்லக்கில் எழுந்தருளி பெரிய ஜீயர் மடத்திற்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஹதிராம் பாபாஜி மடத்திற்கு சென்று அங்கு தேவஸ்தானம் சார்பில்   மரியாதை செய்யப்பட்டது.

     

    பின்னர்  ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள இடத்தில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம் நடைபெற்றது. இதில் உள்ளூர் இளைஞர்களும், பக்தர்களும் திரளாக பங்கேற்று வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப் பொருளை எடுத்தனர்.

    பின்னர் ஹதிராம்பாபஜீ மடத்தின் சார்பில் சிறப்பு ஆரத்தி வழங்கப்பட்டு மீண்டும் நான்கு மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக பக்தர்களுக்கு அருள் பாலீத்தப்படி கோவிலை வந்தடைந்தார். இதில் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி,  துணை செயல் அலுவலர்  ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
     

  • Thirupathiyil July 16 Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி 16ஆம் தேதி பல சிறப்பு தரிசனங்களைத் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 

    இந்த ஆண்டின் சந்திர கிரகணம் 17 ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் 16 ஆம் தேதி தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரை ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் கோவிலை முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. 

    மேலும் அன்று இரவு சந்திர கிரகணத்தையொட்டி இரவு 7 மணி முதல் 17-ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் கதவுகள்  அடைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஏழுமலையான் கோவிலில்  மாற்றுத்திறனாளிகள், மற்றும் மூத்த குடிமக்கள் , சுபதம் நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கக் கூடிய ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம்,  17-ஆம் தேதி அதிகாலை நடைபெறக்கூடிய அங்கப் பிரதட்சனை சேவை ஆகியவை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதால் அன்றைய தினம் ஆதார் அடையாள அட்டையின் மூலமாக வழங்கக் கூடிய சர்வ தரிசனம் டிக்கெட் மற்றும் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் டிக்கெட் ஆகியவையும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இலவச தரிசனத்தில் மட்டும் அந்த ஐந்து மணிநேரத்திற்கு மட்டும்  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.