Tag: Thirumanam

  • Thirumanam kaikooda vazhigal

    துளசி கல்யாணம் செய்தால் திருமணம் நடைபெறும்.

    ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் நடைபெறும்.

    சென்னை – திருவேற்காட்டில் கருமாரியம்மனை தரிசிக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கூடி வருகிறது.

    வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்தால் திருமணம் நடைபெறும்.

    நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள்.

    கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களும் நீங்கி திருமணம் கூடி வருகிறது.

    முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நிச்சயமாகும்.

    வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றினால் திருமணம் கை கூடும்.

    புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் நடைபெறும்.

    ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.
     

  • Thirumanam Kaikooda Navarathiri

    நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

    நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

    நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.

    உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

    நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

    தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.

    கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.

    நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

    சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

    ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

    ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.

    கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

    தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.
     

  • Thirumanam Kuritha Kavalaya

    உங்கள் மகன், மகள் திருமணம் தடைகளால் தாமதம் ஆகிறதா? கவலை வேண்டாம். கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திற்கு வந்து  தடைகள் நீங்கி மகிழ்ச்சி அடையுங்கள்.

    பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை ஆகியவற்றுக்கு உடனடியாக தீர்வை ஏற்படுத்தி தருகிறார் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

    மகன், மகளுக்கு திருமணம் நடக்காமல் அவதிப்பட்டு வந்த ஏராளமான பெற்றோர்  அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திற்கு வருகை தந்து சித்தர்கள் அருளால் தடைகள் நீங்கி தங்கள் குழந்தைகளின் திருமணம் நடந்து வாழ்வு செழித்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு வந்து திருமணத் தடைகள் நீங்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் திருமணம் நடந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    இதேபோல் தொழில் முன்னேற்றம் இல்லாமல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடை. வேலை வாய்ப்பில் ஏற்பட்டு வரும் தடை ஆகியவையும் முழுமையாக சரியாகிறது. பரிகாரம் செய்ய வேண்டி இருந்தால் மட்டுமே ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள் செய்ய சொல்கிறார். இங்கு வந்து பயன் பெற்றவர்கள் ஏராளம்… ஏராளம் பேர். மனதை வருத்திய கடன் தீர்ந்து நிம்மதியுடன் வாழ்கின்றனர். 

    திருமணத்தடைகள் நீங்க இங்கு வந்து பரிகார பூஜைகள் செய்தவர்கள் மனம் போல் மாங்கல்யம் உடனே அமைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சுருளி மலையில் உலக மக்களின் நன்மைக்காக 10008க்கும் அதிகமான யாகம் செய்துள்ளார். இந்த யாகம், சித்தர்கள் மற்றும் பல தெய்வங்களை வேண்டி மக்கள் நன்மைக்காக செய்துள்ளார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

    நவக்கிரக தோஷம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, குழந்தைகளின் கல்வி, முன்னோர்கள் சாபம், திருமணத்தடை என்று அனைத்து பிரச்னைகளுக்கும் பரிகார நிவர்த்தி பூஜைகளை சித்தர்கள் அருளாசியுடன் சிறப்பாக செய்து தேடி வந்தவர்களின் குறைகளை தீர்த்து வைத்து வருகிறார் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சுவாமிகளை சந்திக்க முன் அனுமதி பெற்று வரவும். மேலும் ஆதியோகவாசி பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

    ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம், C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ), கோயமுத்தூரில் அமைந்துள்ளது. இங்கு சித்தர்கள் அருளால் பல பிரச்னைகள், மன வேதனைகளுடன் வருபவர்கள் நிம்மதி போன்றவை கிடைக்கிறது.
    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.