Tag: Thirumana

  • Thirumana Thadai Neekum Vinayakar

    மகாகணபதி எழுந்தருளியிருக்கும் கோயில்களில் ஒன்று, சேண்பாக்கம்.  ஒரே கருவறையில் பதினோரு சுயம்பு லிங்கங்களாக விநாயகப்பெருமான் திருவருள்புரியும் இத்திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கத்தில் உள்ளது. பிரதான விநாயகராக செல்வ விநாயகர் அருள்கிறார். தலமரமாக வன்னிமரம் போற்றப்படுகிறது. இது மிகவும் தொன்மையான தலம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மராட்டிய அமைச்சரான துக்காஜி தனது தேரில் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். 

    ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கி பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்பளித்தது. பயந்து போனார் துக்காஜி. அப்போது விநாயகர் அசரீரியாக ‘இவ்விடத்தில் ஏகாதச வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வந்து ஆலயம் எழுப்பு,’ என்று ஆணையிட்டார். அதன்படி இவ்விடத்தில் லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து பிரதிஷ்டை செய்தார் துக்காஜி. மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் தேர் சக்கரம் ஏறிய வடு இன்னமும் உள்ளது.

    ஆதிசங்கரருக்கு சுயம்பு மூர்த்தங்களை தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். சேண்பாக்கத்தில் 11 சுயம்பு மூர்த்திகள் இருப்பதை அறிந்து அவர் இத்தலத்திற்கு வந்தார். 11 சுயம்பு மூர்த்திகளும் லிங்க வடிவிலேயே இருப்பதைக் கண்டார். பின் தன் ஞானதிருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார். சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். இவ்வாறு ஆதிசங்கரரின் இக்கோயிலை வழிபட்டிருக்கிறார் என்பதிலிருந்தே இந்தக் கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்கும்.  

    இந்த யந்திரத்தின் அருகே நவகிரக மேடை அமைத்துள்ளனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு. திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள நவகிரகத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பாலவிநாயகருக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள்.  விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
     

  • Thirumana Dhosham Neenga

    துளசி கல்யாணம் செய்தால் திருமணம் நடைபெறும்.

    ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் நடைபெறும்.

    சென்னை – திருவேற்காட்டில் கருமாரியம்மனை தரிசிக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கூடி வருகிறது.

    வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்தால் திருமணம் நடைபெறும்.

    நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள்.

    கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களும் நீங்கி திருமணம் கூடி வருகிறது.

    முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நிச்சயமாகும்.

    வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றினால் திருமணம் கை கூடும்.

    புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் நடைபெறும்.

    ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.

  • Thirumana thadai neenga

    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த ஸ்தோத்திரம் நற்பலனை வாரி வழங்க வல்லது. 

    ஓம் ஷண்முக பதயே நமோ நம!
    ஓம் ஷண்மத பதயே நமோ நம!
    ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
    ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம!
    ஓம்ஷட்கோண பதயே நமோ நம!
    ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
    ஓம் நவநிதி  பதயே நமோ நம!
    ஓம் சுபநிதி  பதயே நமோ நம!
    ஓம் நரபதி பதயே நமோ நம!
    ஓம் சுரபதி பதயே நமோ நம!
    ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
    ஓம் ஷடஷர பதயே நமோ நம!
    ஓம் கவிராஜ பதயே நமோ நம!
    ஓம் தபராஜ பதயே நமோ நம!
    ஓம் இகபர பதயே நமோ நம!
    ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
    ஓம் ஜயஜய பதயே நமோ நம!
    ஓம் நயநய பதயே நமோ நம!
    ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
    ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
    ஓம் வல்லீ பதயே நமோ நம!
    ஓம் மல்ல பதயே நமோ நம!
    ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
    ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
    ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
    ஓம் இஷ்டி பதயே நமோ நம!
    ஓம் அபேத பதயே நமோ நம!
    ஓம் கபோத பதயே நமோ நம!
    ஓம் வியூஹ பதயே நமோ நம!
    ஓம் மயூர பதயே நமோ நம!
    ஓம் பூத பதயே நமோ நம!
    ஓம் வேத பதயே நமோ நம!
    ஓம் புராண பதயே நமோ நம!
    ஓம் ப்ராண பதயே நமோ நம!
    ஓம் பக்த பதயே நமோ நம!
    ஓம் முக்த பதயே நமோ நம!
    ஓம் அகார பதயே நமோ நம!
    ஓம் உகார பதயே நமோ நம!
    ஓம் மகார பதயே நமோ நம!
    ஓம் விகாச பதயே நமோ நம!
    ஓம் ஆதி பதயே நமோ நம!
    ஓம் பூதி பதயே நமோ நம!
    ஓம் அமார பதயே நமோ நம!
    ஓம் குமார பதயே நமோ நம!

    ஓம் சரவண பவ