Tag: Tharum

  • Iswaryam tharum kavi kolam

    ராமாவதாரத்தில்,வனவாசத்தின் போது, சீதையை ராவணன் கவர்ந்து செல்ல தேடி ராமரும் அவரின் சேனைகளும் அன்னையை நாலாபுறம் தேடிக் கொண்டிருந்தனர். இந்த அவதாரத்தின் நோக்கம் ராவணனை வதம் செய்வதே என்றும்  அதனை நிறைவேற்ற அன்னை பகவதி தேவியின் அருள் வேண்டி நவாரத்திரி விரதம் அனுஷ்டித்தால் நல்ல பலன் உண்டு என்றும் சொல்கிறார் நாரத மாமுனி.

    நாரதரின் ஆலோசனைப்படி ,மிகவும் சிரத்தையுடன் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார் ராமர். அஷ்டமி அன்று இரவில் ராமருக்கு,அம்பிகை சிம்ம வாஹினியாக காட்சிதந்து அருளினார். அதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை அவருக்கு  நினைவுபடுத்தி, ' தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள். ஆதிசேஷனின் அம்சமான, உன் சகோதரன் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான் என்று அருளினாள்.

    இத்தகைய மகத்துவம் வாய்ந்த நவரத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் எண்ணிலடங்காதது.திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்ய சிவ பெருமான் இந்த விரதத்தை கடைப்பிடித்ததாக புராணம் கூறுகிறது. மேலும்  விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், இந்த விரதத்தை  அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர்.

    நவராத்திரி நாட்களில் கொலுவீற்றிருக்கும் அம்பிகையின் முன்  சுண்ணாம்பு மாவினால் ஆன கோலம் போடக்கூடாது.அதற்கு பதில் அரிசி மாவைப் பயன்படுத்த வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமையையும் செல்வமும் பெருகும். நவராத்திரி கோலத்தை சுற்றி காவியால் கோடிட்டு போட்டால் ஐஸ்வர்யம் பெருகும்.

    நவராத்திரி காலங்களில் காலையில் செய்யப்படும் பூஜை சிவனுக்கும், மாலை இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாட்டுக்கு  உகந்தது. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்து துவங்க வேண்டும்.  நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்தால் அம்பிகையோடு அய்யனின் அருளும் கிடைக்கும். . நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று விரதமிருந்து வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். சப்தமி திதியில், ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் கூறுவது  மென்மேலும் பலன்களைத் தரும். விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் நிறைவாகும்.

  • Vetri tharum biravar pootri

    பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.

    01. ஓம் பைரவனே போற்றி
    02. ஓம் பயநாசகனே போற்றி
    03. ஓம் அஷ்டரூபனே போற்றி
    04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    05. ஓம் அயன்குருவே போற்றி

    06. ஓம் அறக்காவலனே போற்றி
    07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    09. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
    15. ஓம் உக்ர பைரவனே போற்றி

    16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
    18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் எல்லை தேவனே போற்றி
    22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    23. ஓம் கபாலதாரியே போற்றி
    24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    25. ஓம் கர்வ பங்கனே போற்றி

    26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    27. ஓம் கதாயுதனே போற்றி
    28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
    29. ஓம் கருமேக நிறனே போற்றி
    30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
    32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    33. ஓம் கால பைரவனே போற்றி
    34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
    35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

    36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
    37. ஓம் காசிநாதனே போற்றி
    38. ஓம் காவல்தெய்வமே போற்றி
    39. ஓம் கிரோத பைரவனே போற்றி
    40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    41. ஓம் சண்ட பைரவனே போற்றி
    42. ஓம் சட்டை நாதனே போற்றி
    43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

    46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
    47. ஓம் சிக்ஷகனே போற்றி
    48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
    49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
    50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    51. ஓம் சிவ அம்சனே போற்றி
    52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    53. ஓம் சூலதாரியே போற்றி
    54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
    55. ஓம் செம்மேனியனே போற்றி

    56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
    58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
    59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
    60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    63. ஓம் நவரச ரூபனே போற்றி
    64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
    65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

    66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    67. ஓம் நாய் வாகனனே போற்றி
    68. ஓம் நாடியருள்வோனே போற்றி
    69. ஓம் நிமலனே போற்றி
    70. ஓம் நிர்வாணனே போற்றி

    71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    72. ஓம் நின்றருள்வோனே போற்றி
    73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    74. ஓம் பகையளிப்பவனே போற்றி
    75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

    76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
    77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
    78. ஓம் பால பைரவனே போற்றி
    79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
    80. ஓம் பிரளயகாலனே போற்றி

    81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
    82. ஓம் பூஷண பைரவனே போற்றி
    83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
    84. ஓம் பெரியவனே போற்றி
    85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

    86. ஓம் மல நாசகனே போற்றி
    87. ஓம் மகோதரனே போற்றி
    88. ஓம் மகா பைரவனே போற்றி
    89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
    90. ஓம் மகா குண்டலனே போற்றி

    91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    92. ஓம் முக்கண்ணனே போற்றி
    93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
    94. ஓம் முனீஸ்வரனே போற்றி
    95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

    96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    98. ஓம் ருத்ரனே போற்றி
    99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    100. ஓம் வடுக பைரவனே போற்றி

    101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
    102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
    103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

    106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
    108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

  • Varam Tharum Narashimar

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடுகளும் அதிகம்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.