Tag: Tamil

  • The hidden secrets of making kolam!

    தமிழர்களின் பண்பாட்டில் ஒளிந்துள்ள வாழ்க்கை தத்துவங்களில் ஒன்று கோலம் போடும் பழக்கம். இதில் பல நன்மைகளும் ஆன்மீக ரகசியங்களும் அடங்கியுள்ளன.

    கோலம் போடும் முறை மற்றும் பலன்கள்:
    அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன், பசுஞ்சாணம் அல்லது மஞ்சள் கலந்த தண்ணீர் தெளித்து, பச்சரிசி மாவால் கோலம் போடுவது சிறந்தது. கோலம் போடுவதன் முக்கிய நோக்கம் தர்மம் செய்வதாகும். பச்சரிசி மாவால் கோலமிடுவதால், எறும்பு, குருவி போன்ற உயிரினங்களுக்கு உணவு கிடைக்கும். இது புண்ணியத்தை சேர்க்கும். இவ்வாறு உயிரினங்களுக்கு உணவளிப்பது மகாலட்சுமியின் அருளை பெற்றுத்தரும். மேலும், கோலம் போடுவது காலை உடற்பயிற்சியாகவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் உள்ளது. எதிர்மறை எண்ணங்களுடன் வருபவர்களின் எண்ணங்களை மாற்றும் சக்தியும் கோலத்திற்கு உண்டு.

    பசுஞ்சாணம் இட்டு மாக்கோலம் போட்டு, அதன் மீது காவி அடித்தால், மும்மூர்த்திகள் எழுந்தருள்வதாக ஐதீகம். பசுஞ்சாணத்தில் விஷ்ணு, மாக்கோலத்தில் பிரம்மா மற்றும் சிவபெருமான் இருப்பதாக நம்பப்படுகிறது. கோலத்தின் எட்டு திசைகளிலும் எட்டு பூக்கள் வைத்தால், அஷ்டதிக் பாலகர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

    கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டியவை:
    கோலம் போடும்போது அமர்ந்து போடக்கூடாது, குனிந்து போட வேண்டும். தெற்கு திசையில் தொடங்கவோ முடிக்கவோ கூடாது. சுப தினங்களில் இரட்டை கோடுகளால் கோலம் போட வேண்டும். தெய்வ உருவங்கள், எந்திர கோலம், ஐஸ்வர்யா கோலம், சக்கரக்கோலம், நவகிரக கோலம் ஆகியவற்றை வாசலில் போடக்கூடாது; பூஜை அறையில் மட்டுமே பச்சரிசி மாவால் போட வேண்டும். அமாவாசை மற்றும் முன்னோர்களை வழிபடும் நாட்களில் கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும்.

    எந்த கிழமையில் என்ன கோலம் போடலாம்?

    • ஞாயிறு: சூரிய கோலம், செந்தாமரை கோலம்.

    • திங்கள்: அல்லி மலர் கோலம்.

    • செவ்வாய்: வில்வ இலை கோலம்.

    • புதன்: மாவிலை கோலம்.

    • வியாழன்: துளசி மாடம் கோலம்.

    • வெள்ளி: தாமரை இலை கோலம்.

    • சனி: பவளமல்லி கோலம்.

    இவை தெய்வீக கடாட்சத்தை பெற்றுத்தரும். சமூக வலைதளங்களில், கோலம் போடுவதன் முக்கியத்துவம் பற்றி பலரும் பகிர்ந்து, இதன் ஆன்மீக மற்றும் உடல் நல பலன்களை வலியுறுத்துகின்றனர்.

  • April 14 2024 Tamil Newyear

    ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு
    குரோதி வருடம் – சித்திரை – 1
    ஏப் 14, 2024
    ஞாயிறு
    தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள்
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சூன்ய
    திதி நேரம் :  சஷ்டி மா 4.47
    நட்சத்திரம் :  மிருகசீரிடம் அ.கா 5.17
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • Tamil newyear kani kanudhal

    சித்திரை முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இது உத்தராயண காலத்தில் சூரியனின் பயணத்தில் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் காலமாகும். இதனையே தமிழ் வருடத்தின் பிறப்பாக கொண்டாடுகிறோம்.
     
    தமிழில் இத்தினத்தில் சித்திரை கனி காணுதல் என்றும் மலையாளத்தில் விஷூ கனி காணுதல் என்கிற சடங்கானது கேரளா மற்றும் தமிழகத்தில் அனைவரது வீட்டிலும் நடைபெறுகிறது. சித்திரை முதல் நாள் கனிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். காரணம் என்னவென்றால் மா, பலா, வாழை என்கின்ற முக்கனிகளும் இக்காலத்தில் கிடைக்கும்.

    பங்குனி கடைசி நாள் இரவே பூஜை அறையில் மாகோலமிட்டு பின் ஒரு பெரிய தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் வைப்பர், தேங்காய் வைப்பர், பின்பு வெற்றிலை, பாக்கு, வாசனை மலர்களை கொண்டும், கொன்றை மலரினாலும் அலங்கரிப்பர்.

    பணம் மற்றும் காசுகளை நிரப்பி வைப்பர், ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை அந்த தட்டில் வைப்பர், அதன் பிறகு உப்பு, சர்க்கரை, அரிசி, பருப்பு முதலானவற்றை தனித்தனி பாத்திரத்தில் நிரப்பி வைப்பர். அதற்கு பின் உறங்க சென்று விட்டு காலையில் எழுந்தவுடன் முதலில் சென்று பூஜை அறையில் உள்ள மங்கள பொருட்களில் கண் விழிக்க வேண்டும்.

    இப்படி செய்வதால் வீட்டில் மங்களம் பொங்கும், லட்சுமி கடாக்க்ஷம் நிறையும் என்றும், வருடம் முழுவதும் மகிழ்ச்சி நிறையும் என்பது நம்பிக்கை ஆகும். இதுவே சித்திரை கனி மற்றும் விஷூகனி காணுதல் எனப்படுகிறது.

  • Tamil newyear special

    சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சித்திரை, தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப்பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். இந்தாண்டு குரோதி வருடம் பிறக்கிறது.

    சித்திரை மாதம் தொடங்குவதற்கு முன், இரவு வீட்டில் நிலைக்கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்-காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்துவிடுவார்கள். மறுநாள் காலையில் துயில் நீங்கி எழும்போது, அந்த தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பார்கள். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.

    பூஜையறைகளை அலங்கரித்து விளக்கேற்றுவதும், முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், புதுவருட பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்க பலனை கேட்பதும், இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.

    சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர்மோர் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப்பச்சடி, பருப்பு வடை, பருப்பு பாயாசம், மசால் வடை போன்றவை இடம்பெறுதல் அவசியம்.

  • Tamil Newyear worship

    சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சித்திரை, தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப்பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். இந்தாண்டு சோபகிருது வருடம் பிறக்கிறது.

    சித்திரை மாதம் தொடங்குவதற்கு முன், இரவு வீட்டில் நிலைக்கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்-காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்துவிடுவார்கள். மறுநாள் காலையில் துயில் நீங்கி எழும்போது, அந்த தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பார்கள். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.

    பூஜையறைகளை அலங்கரித்து விளக்கேற்றுவதும், முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், புதுவருட பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்க பலனை கேட்பதும், இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.

    சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர்மோர் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப்பச்சடி, பருப்பு வடை, பருப்பு பாயாசம், மசால் வடை போன்றவை இடம்பெறுதல் அவசியம்.

  • Tamil newyear sirappugal

    சித்திரை 1 …. உலகத் தமிழர்களால் ஏப்ரல் 14ஆம் தேதி புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் முதல் நாளாக கருதப்படும் சித்திரை 1 ஆம் தேதி, அரசு விடுமுறை அளித்து வருகிறது. 

    தமிழர்களின் நாட்காட்டியில் அமைந்துள்ள முதல் மாதமான சித்திரையின் முதல் நாளை ’புது வருஷம்’ என்றும் அழைப்பர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ’சித்திரை விஷு’ என்றும் அழைக்கின்றனர்.

    அதேசமயம் கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். 

    தமிழ்ப்புத்தாண்டு அன்று தமிழ் மக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, அலங்காரத் தோரணமிடுவர். இதையடுத்து பாரம்பரிய புத்தாடை அணிந்து, மூத்தோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவர். பின்னர் கோவில்களுக்கு சென்று, புத்தாண்டு சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்வர். 

    தமிழ்ப்பத அன்றைய வழிபாட்டின் போது, ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைப்பர். அதேபோல் தங்க, வெள்ளி நகைகள், சில்லரைக் காசுகளை வைத்தும், வெற்றிலை பாக்கு, பூக்கள் ஆகியவற்றை கடவுளின் படத்தின் முன்பு வைத்து வழிபாட்டில் ஈடுபடுவர்.

    ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். இந்தாண்டு சுபகிருது வருடம் என்ற பெயரில் பிறந்துள்ளது. 

  • Tamil new year special

    சித்திரை 1 …. உலகத் தமிழர்களால் ஏப்ரல் 14ஆம் தேதி புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் முதல் நாளாக கருதப்படும் சித்திரை 1 ஆம் தேதி, அரசு விடுமுறை அளித்து வருகிறது. 

    தமிழர்களின் நாட்காட்டியில் அமைந்துள்ள முதல் மாதமான சித்திரையின் முதல் நாளை ’புது வருஷம்’ என்றும் அழைப்பர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ’சித்திரை விஷு’ என்றும் அழைக்கின்றனர்.

    அதேசமயம் கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். 

    தமிழ்ப்புத்தாண்டு அன்று தமிழ் மக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, அலங்காரத் தோரணமிடுவர். இதையடுத்து பாரம்பரிய புத்தாடை அணிந்து, மூத்தோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவர். பின்னர் கோவில்களுக்கு சென்று, புத்தாண்டு சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்வர். 

    தமிழ்ப்பத அன்றைய வழிபாட்டின் போது, ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைப்பர். அதேபோல் தங்க, வெள்ளி நகைகள், சில்லரைக் காசுகளை வைத்தும், வெற்றிலை பாக்கு, பூக்கள் ஆகியவற்றை கடவுளின் படத்தின் முன்பு வைத்து வழிபாட்டில் ஈடுபடுவர்.

    ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். கடந்தாண்டு விகாரியில் பிறந்தது. இந்தாண்டு என்ற பிலவ  வருடம் என்ற பெயரில் பிறந்துள்ளது.