Tag: Srisailam

  • Srisailam Koil Hundiyal Kanikkai

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீ சைலத்தில் புகழ்பெற்ற சைவ திருத்தலமான மல்லிகார்ஜுன சாமி, பிரனராம்பிகா தேவி  கோவில்களில் கடந்த 27 நாட்களில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்  உண்டியலில்  காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம்,வெள்ளி  உள்ளிட்ட பொருட்கள் கணக்கிடப்பட்டண.

     சி.சி டி.வி. கேமரா கண்காணிப்புக்கு மத்தியில் கோவில் பணியாளர்கள்,  தன்னார்வலர்கள், சிவ பக்தர்கள் என400 க்கும் மேற்பட்டோர்  கோவில் அதிகாரிகள் முன்னிலையில் இன்று காலை உண்டியல் காணிக்கை வருமானத்தை கணக்கிட்டனர். 

    அப்போது கடந்த 27 நாட்களில் 2 கோடியே 54 லட்சத்து 37 ஆயிரத்து 397 ரூபாய் பணம், இதில் 758 அமரிக்க டாலர்கள், 120 ஆஸ்திரேலிய டாலர்கள், 30 சவுதி ரியால்கள்,10 இங்கிலாந்து நாட்டு பவுண்ட், 5 குவைத் தினார்,4 கத்தார் ரியால்,சிங்கப்பூர் டாலர்கள் 5,ஓமன் ரியால் 2,மலேசிய ரிங்கிட்ஸ் 2 ஆகியவற்றை பக்தர்கள் மல்லிகார்ஜூன சாமி, பிரம்மராம்பிகா தேவிக்கு  காணிக்கையாக சமர்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். .