Tag: Sri Saibaba

  • Sri Saibaba Gayathri Mandiram

    மதங்களை கடந்து அணைவராலும் வணங்கப்படுபவர் சாய் பாபா. கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதப்படும் சாய் பாபாவை எவர் ஒருவர் வணங்கினாலும், சாய் பாபா ஓடோடி வந்து அவர்களின் துன்பத்தை துடைப்பார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் சாய் பாபாவை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் உச்சரிப்பது மேலும் சிறப்பானதாக அமையப்பெறும்

    ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே..

    சச்சிதானந்தாய தீமஹி..

    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    இந்த மந்திரத்தை தினசரி 11 முறை அல்லது 33 முறை அல்லது 108 முறை செபிப்பது உகந்தது. தினசரி ஜெபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இதை ஜெபிப்பவர்களுக்கு சாய் பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கப்பெற்று வளமுடன் வாழ்வர்.

  • sri Saibaba mandiram

    இந்த பூவுலகில் மனித உருவெடுத்த மகானாக வணங்கப்படுகிறார் ஷீரடி சாய்பாபா. மதங்களை கடந்த ஒரே கடவுளாக இன்று மக்களிடைய நிலைத்திருக்கும் இவரை வணங்கினால் அருளாசி நிச்சயம் கிடைக்கும். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக இருந்து இன்று பல பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். இப்படி பக்தர்களை இமைப்போல காக்கும் சாய்பாபாவை வணங்கி சாய்பாபா மகா மந்திரத்தை மனதார ஜெபிப்போருக்கு வெற்றி நிச்சயம்.

    ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

    இந்த மந்திரத்தின் பொதுப்பொருளானது உலகின் மூல ஓசையான ஓம் இந்த வார்த்தை கரடு முரடான மனதை கூட ஆழ் நிலை தியான நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரே மூல மந்திரம் ஓம்..

    ஸ்ரீ என்ற வார்த்தைக்கு திரு என்று பொருள் தெய்வீக சக்தி பெற்ற ஒரு அறிய சொல் ஸ்ரீ!

    ஜெய..ஜெய..என்பது வெற்றியை குறிக்கும் ஜெயம் என்ற சொல்லின் சுருக்கமே ஜெய…!

    சாயி என்பதன் பொருள் அர்த்தமற்ற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஒரு அற்புத மகான். ஞானத்தின் ஒளி உலகின் பொது கடவுள் என் பல அற்புத பொருள்களை கொண்ட சொல் சாயி…!

    நாம் ஒரு வேண்டுதலை சாய்பாபாவிடம் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை அவருக்கு உகந்த வியாழக்கிழமைகளில் உச்சரித்தால் எண்ணியவை யாவும் ஈடேறும், சாய்பாபவின் அருளும் ஆசியும் என்றென்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும்.
     

  • Sri Saibaba Mandhirangal

    சாய்பாபாவின் வழிபாட்டிற்கு உகந்த சிறப்பு வாய்ந்த மந்திரங்களை காண்போம். இந்த மந்திரங்களை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் அனைத்து வித நன்மைகளும் நடக்கும்.

    ஷீரடி சாய்பாபாவின் காயத்ரி :

    ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
    ஸர்வ தேவாய தீமஹி
    தந்தோ ஸர்வப்ரசோதயாத்

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
    சச்சிதானந்தாய  தீமஹி
    தந்நோ சாய்  ப்ரசோதயாத்

    ஷீரடி சாய்பாபாவின் தியான ஸ்லோகம் :

    பத்ரி க்ராம ஸமத் புதம்
    த்வாரகா மாயீ வாசினம்
    பக்தா பீஷ்டம் இதம் தேவம்
    ஸாயி நாதம் நமாமி :

    ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம் :

    "ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"
     
    சாயிநாதர் திருவடி :

    ஸாயி நாதர் திருவடியே
    ஸம்பத் தளிக்கும் திருவடியே
    நேயம் மிகுந்த திருவடியே
    நினைத்த தளிக்கும் திருவடியே
    தெய்வ பாபா திருவடியே
    தீரம் அளிக்கும் திருவடியே
    உயர்வை யளிக்கும் திருவடியே

    ஓம் சாய் ராம்