Tag: spiritual practice

  • Worship of Mahalakshmi-Perumal to overcome financial difficulties!

    செல்வ செழிப்புடன் வாழவும், பணக்கஷ்டம் தீரவும் மகாலட்சுமியை வழிபட வேண்டும் என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். ஆனால், மகாலட்சுமியை வழிபடுவதற்கு முன் பெருமாளை வணங்கினால் மட்டுமே அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதற்கு ஏகாதசி திதி மிகவும் உகந்தது, குறிப்பாக ஆனி மாத வளர்பிறை ஏகாதசி. இந்த எளிய வழிபாடு முறை பணக்கஷ்டத்தை தீர்க்க உதவும்.

    ஜூலை 6, ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியன்று, காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, பெருமாளை நினைத்து விரதம் தொடங்கவும். மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்து விரதத்தை முடிக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள், இரவு 10 மணிக்குள் வழிபாடு செய்யலாம். தலைக்கு குளித்து, அசைவ உணவை தவிர்ப்பது அவசியம்.

    பூஜையில், பெருமாள் மற்றும் மகாலட்சுமி படங்களுக்கு துளசி மாலை அல்லது வாசனை மலர்களால் அலங்கரிக்கவும். மூன்று விளக்குகளில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, வடக்கு நோக்கி தீபம் ஏற்றவும். நெய்வேத்தியமாக பால் பாயாசம் அல்லது காய்ச்சிய பால் வைக்கவும். பெருமாளுக்கு துளசி இலைகளால் “ஓம் நமோ நாராயணாய” நாமத்தை 111 முறை உச்சரித்து அர்ச்சனை செய்யவும். இந்த வழிபாடு பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளால் பணக்கஷ்டத்தை தீர்க்கும்.

  • Worship of Mahalakshmi-Perumal to overcome financial difficulties!

    செல்வ செழிப்புடன் வாழவும், பணக்கஷ்டம் தீரவும் மகாலட்சுமியை வழிபட வேண்டும் என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். ஆனால், மகாலட்சுமியை வழிபடுவதற்கு முன் பெருமாளை வணங்கினால் மட்டுமே அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதற்கு ஏகாதசி திதி மிகவும் உகந்தது, குறிப்பாக ஆனி மாத வளர்பிறை ஏகாதசி. இந்த எளிய வழிபாடு முறை பணக்கஷ்டத்தை தீர்க்க உதவும்.

    ஜூலை 6, ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியன்று, காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, பெருமாளை நினைத்து விரதம் தொடங்கவும். மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்து விரதத்தை முடிக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள், இரவு 10 மணிக்குள் வழிபாடு செய்யலாம். தலைக்கு குளித்து, அசைவ உணவை தவிர்ப்பது அவசியம்.

    பூஜையில், பெருமாள் மற்றும் மகாலட்சுமி படங்களுக்கு துளசி மாலை அல்லது வாசனை மலர்களால் அலங்கரிக்கவும். மூன்று விளக்குகளில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, வடக்கு நோக்கி தீபம் ஏற்றவும். நெய்வேத்தியமாக பால் பாயாசம் அல்லது காய்ச்சிய பால் வைக்கவும். பெருமாளுக்கு துளசி இலைகளால் “ஓம் நமோ நாராயணாய” நாமத்தை 111 முறை உச்சரித்து அர்ச்சனை செய்யவும். இந்த வழிபாடு பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளால் பணக்கஷ்டத்தை தீர்க்கும்.

  • Simple spiritual remedy to pay off debt: Mango leaf mantra

    கடன் சுமையால் தவிக்கிறவர்களுக்கு எளிய ஆன்மீக பரிகாரம் ஒரு வழிகாட்டியாக அமையும். கடனை அடைக்க சொத்து, நகை விற்பது ஒரு வழியாக இருந்தாலும், எந்த வழியுமின்றி தவிப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நம்பிக்கையை அளிக்கிறது. இந்த பரிகாரத்துக்கு ஒரு மா இலை, உப்பு தண்ணீர் மட்டுமே தேவை. வீட்டில் கிழக்கு பார்த்து அமர்ந்து, ஒரு தட்டு அல்லது கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து உப்பு தண்ணீர் தயாரிக்கவும்.

    பிறகு, ஒரு மா இலையில் ஸ்கெட்ச் பேனாவால் உங்கள் கடன் தொகையை எழுதுங்கள், உதாரணமாக, “5 லட்ச ரூபாய் கடன் சீக்கிரம் அடைய வேண்டும்” என்று. கருப்பு நிற பேனாவைத் தவிர, நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு நிற பேனாக்களை பயன்படுத்தலாம்.இந்த இலையை கையில் பிடித்து, கடன் தீர வேண்டும் என முழு நம்பிக்கையுடன் பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்யவும்.

    பின்னர், ஒரு மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கை ஏற்றி, மா இலையை நெருப்பில் பொசுக்கி, அதன் சாம்பலை உப்பு தண்ணீரில் கரைத்து, கால் படாத மண் பாங்கான இடத்தில் கொட்டவும். இந்த பரிகாரத்தை தினமும் அல்லது ஞாயிறு காலையில் செய்யலாம். 48 நாட்களில் கடன் தீர ஒரு வழி கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் உறுதியளிக்கின்றனர்.