Tag: Solai Malai

  • Solai Malai Murugan Koil Kandha sasti vizha

    அழகர்மலை உச்சியில் முருகபெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 28ம் தேதி துவங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் போது நாவல்பழம் பழுக்கும் ஸ்தலவிருட்சமான நாவல் மரம் முன்பாக சூரசம்ஹாரம் நடைபெற்று வருகிறது. 

    வரும் 28 ஆம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், யாகசாலை பூஜை, உற்சவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 

    29ம் தேதி வழக்கமான பூஜை, காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 

    30ம் தேதி காலை யானை வாகனத்திலும், 

    31ம் தேதி ஆட்டு கிடாய் வாகனத்திலும்,  

    நவ.1ம் தேதி சப்பர வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 

    2ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெறும். 5.30 மணிக்கு முருகபெருமான் கஜமுகசூரனையும், சிங்கமுக சூரனையும் சம்ஹாரம் செய்து, ஸ்தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடைபெறுகிறது. 3ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவத்துடனும் திருவிழா நிறைவுபெறுகிறது.