Tag: Siddhargal

  • Navanadha Siddhargal

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    நவநாத சித்தர்கள் பாகம் 1

    சித்தர் பட்டியல் 
    என்பது 
    விசித்திரமானது.

    'நவநாத சித்தர்கள்' 
    என்று 
    ஒரு பட்டியல் உண்டு. 'நவநாத வர்க்கம்' 
    என்றும் சொல்வார்கள்.

    சித்தர்களை 
    வடக்கே 
    வரிசைப்படுத்தியவர்
    நவநாத சித்தர்கள் 
    எனப் 
    பெயர் சூட்டினர்.

    அதே பாணியில் 
    தெற்கே 
    தமிழகத்தின் சித்தர்கள் பதினெண் சித்தர்கள் என்று 
    அழைக்கப்பட்டனர்.

    முதன்முதலில் 
    சித்தர் 
    பட்டியலிட்டவர்கள்
    9 சித்தர்கள் அடங்கிய பட்டியலைத் தான் வெளியிட்டார்கள்.

    அதில் கூட
    வெவ்வேறு 
    பெயர்கள் உள்ளன.

    சத்யநாதர்
    சதோக நாதர் 
    ஆதி நாதர்
    அனாதி நாதர் 
    வகுனி நாதர் 
    மதங்க நாதர் 
    மச்சேந்திர நாதர் கஜேந்திர நாதர் 
    கோரக்க நாதர் 

    இந்த 
    ஒன்பதின்மர்களும் நவநாத சித்தர்கள் என்கிறது 
    ஓர் ஆதிகாலப் பட்டியல்.

    அபிதான சிந்தாமணி வேறொரு பட்டியலைப்
    வேறு பெயர்களுடன் தருகிறது.

    சத்துவ நாதர் 
    சாலோக நாதர்
    ஆதி நாதர் 
    அருளி நாதர் 
    கடயிந்திர நாதர் 
    கோரக்க நாதர் 
    குக்குட நாதர்.

    இன்னொரு 
    பட்டியலில்
    வேறு சிலர்.

    அந்தளேந்திரர் 
    கோரக்கர் 
    கொங்கணர் 
    நாகார்சுநர்
    மச்சேந்திரர் 
    பீமநாதர்
    அருணகிரி நாதர் 
    புஜங்க குருநாதர் ஆதிநாதர்
     
    ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    கணநாதர் 
    என்பவரும் 
    நாக நாதர் என்கிறது 
    ஒரு குறிப்பு.

    எத்தனை பேர் 
    இருந்தால் என்ன 
    அவர் தம் 
    வாழ்வும் வரலாறும் 
    அவர் கற்றுத் தந்த சித்துக்களும் 
    அருளிச் சென்ற நூல்களும் 
    சித்தர்களின் 
    சிறப்பைச் சொல்கின்றன. நல்வழி காட்டுகின்றன.

    நவநாத சித்தர்களைப் பார்க்கும் புண்ணியம் யாருக்கும் கிடைக்காது.

    அபூர்வமாக 
    விண்வெளிப் பயணத்தில் சிலருக்கு இனிய கானம் மிதந்து செல்வதை உணரும்
    பாக்கியம் கிட்டும்.

    அந்த 
    இனிய கானம் தான் நவநாத சித்தர்களின் இருப்பு.

    சித்தர் நெறியில் 
    சிறந்தோர்க்கே கிடைக்கும் 
    இந்த வாய்ப்பு.

    ஆதி சித்தர்களென அடையாளம் கொண்டவர்களை 
    நவநாத சித்தர்கள்
    எனக் கொண்டு 
    அவர்தம் 
    சிறப்புகளைச்
    சிறிது காண்போம்.

    சிறிதே இருக்கிறது –
    அவர்கள் பற்றிய 
    குறிப்புகள்.

    நவநாத சித்தர்கள் அம்மனை 
    வழிபடுபவர்கள்
    சக்தி உபாசகர்கள்
    என்பது வெளிப்படை.

    நவநாத சித்தர்களில்
    முதல் சித்தர் 
    சத்ய நாதர்.

    'ஞானச் சித்தர்' 
    என்பது 
    போற்றப்படும் 
    அவர் திருநாமம்.

    கால நிர்ணயம் அற்றவர்களே 
    சித்தர்கள் என்பது 
    ஆன்மீக நம்பிக்கை.

    ஞானப் பாடல்கள் 35 
    மெய் ஞானம் 12 
    என சத்ய நாதரின்
    47 பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

    'மனோன்மணி'
    என்று 
    அம்பிகையை முன்னிறுத்தியே பாடியிருக்கிறார் 
    சத்ய நாதர்.

    இரண்டாவது சித்தர் சதோக சித்தர்.

    யோக ஞானம் 
    பற்றி 
    அதிகம் பாடியதால் 
    'யோக சித்தர்'
    என்றழைக்கிறது 
    சித்தர் உலகம்.

    அம்பிகையை 
    வணங்கும் 
    சக்தி உபாசகரான 
    சதோக நாதர் அடிப்படையில் 
    ஒரு சைவர்.

    47 கண்ணிகள்
    கொண்ட 
    இவரது பாடல்கள் 'மாங்குயிலே' 
    என நிறைவு கொள்கின்றன.


    மூன்றாவது சித்தர் ஆதிநாதர்.

    வடமொழியிலிருக்கும் 
    வேதங்கள் 
    உபநிடதங்கள் முதலானவற்றைத்
    தமிழில் பாடியவர்.

    அதனால் 
    'வேதாந்தச் சித்தர்' 
    என்ற சிறப்பு பெயர் இவருக்கு உண்டு.

    சித்தர் இலக்கியத்திற்கு பெருமை சேர்ப்பவை நவநாத சித்தர் பாடல்கள்.

    அவற்றில் குறிப்பிடத்தக்கது 
    ஆதி நாதர் அருளிய 
    32 கண்ணிகளால் 
    ஆன பாடல் தொகுதி.

    ஞான சூத்திரம் 
    27 பாடல்கள். 
    கண்ணியில்
    நூறு வகை.

    யோனி பேதம் 
    எழுவகைத் தோற்றம் பிரணவம்
    ஐந்தெழுத்து 
    ஆறாதார வடிவம்
    சமாதி 
    மண் 
    பெண் 
    பொன்னாசை முதலானவற்றை விரித்துச் சொல்லி உணர்ந்து படிப்போரை உய்விக்கின்றார்
    ஆதி நாதர்.

    ஞான சூத்திரத்தில் 
    வாசி மார்க்கம் 
    காயகற்பம் 
    நாக கற்பம்
    வியாதிகள் பற்றி விரிந்துரைக்கின்றார்.

    நான்காவது சித்தர் காலாங்கி நாதர்.

    'அனாதி நாதர்' 
    என்பது 
    சிறப்புப் பெயர்.

    காலாங்கிநாதர் 
    பற்றிய குறிப்புகள் நிறைய உண்டு.

    காலாங்கி நாதரே பிற்காலத்தில் 
    கமலமுனி 
    என்கிறது 
    ஒரு சித்தர் குறிப்பு.

    காலாங்கி 
    திருமூலரின் சீடர். போகருடைய குரு.

    உபதேச ஞானத்தில் 
    முக்தி ரகசியம் 
    தியானம் செபிக்கும் மந்திரம் 
    சுழிமுனை 
    சிவயோக ஞானம்
    வாசியோக ஞானம் 
    என 
    ஆன்மீக நுட்பத்தைக்
    கற்றுத் தருகிறார் காலங்கி நாதர்.

    சீன தேசத்தவர் 
    எனினும் 
    தமிழகம் வந்து 
    சித்தராகி 
    சதுரகிரியில் 
    நெடுநாள் இருந்தவர் காலங்கி நாதர்.

    சுண்ணம் தயாரிப்பதில் உள்ள சூட்சமங்கள்
    காலாங்கி நாதர் 
    உலகுக்குத் தந்த 
    கொடையெனச் சொல்லலாம்.

    துருசுச் சுண்ணம் 
    நிமிளைச் சுண்ணம் கருவங்கச் சுண்ணம்
    நாகச் சுண்ணம் முதலானவற்றின் தயாரிப்பு முறைகளை மறை சொற்களாய் பாடலாக்கி 
    அருளி உள்ளார்
     அனாதி நாதர்.

    நவநாதர்களில் 
    5ஆவது சித்தர்
    வகுளி நாதர்.

     மௌன உபதேசம் அருளியதால் 
    'மௌன சித்தர்'
    என
    பூஜிக்கப்படுகிறார்.

    சக்தி உபாசகரான
    வகுளி சித்தர்
    12 பாடல்களாக 
    குறிஞ்சிப்பா படைத்திருக்கிறார்.

    8 பாடல்களில் 
    கற்பூர தேகசம்
    பிரணவ துரியம் மௌனத்திலிருந்து மார்க்கம் 
    நெற்றிக்கண் ரகசியம் மகா தீட்சை முதலானவற்றை 
    விளக்கி உள்ளார்.

    எளிமையான 
    பாடல்களில் 
    வலிமையான 
    ஞானத்தைப் பதிந்திருப்பது 
    வகுளி நாதரின் 
    சிறப்பு.

    ஊணுறக்கம் நீக்கி 
    யோக நிஷ்டை புரிந்து உற்றாரைத் துறந்து மலைக் குகையில் 
    தவமிருந்து 
    கண்ணுக்கு எட்டாத பரவெளியைக் கண்டோம்.

    பின்னர் 
    காயகற்பம் உண்டு உடலை கற்பமாக பெற்றோம்.

    அதன் பின்னர் 
    சக்தி சக்கர பீடமேறி 
    சுத்த வெளியைக் கண்டோம்.

    சகலமும்
    பரவெளியென 
    உணர்ந்து 
    சித்தி பெற்ற முக்தர்களைத் 
    தினம் தினம் 
    தரிசித்தோம்.'

    என 
    ஞானநிலைப்
    படிகளை 
    வகுளி நாதர்
    படிப்படியாய் வகுத்திருக்கிறார்.

    இது 
    அவரது 
    அருள் நிறை
    படைப்பாற்றலுக்குச் சான்று.

    (மீதமுள்ள நவநாத சித்தர்கள் பற்றி அடுத்த பதிவில்…)
     

  • Siddhargal potriya mounaguru

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    மதுரையம்பதியில் மாசுமருவற்ற 
    வைதீக தெலுங்கு
    பிராமணர் குலத்தில் அவதரித்தது 
    ஓர் ஆண் மகவு.

    தந்தை 
    சோமநாத அவதானியார். தாய்
    பார்வதி அம்மை.
    காலம் 
    18ஆம் நூற்றாண்டு.

    அக்குழந்தைக்குப்
    பெற்றோர் வைத்த பெயர் சிவராமகிருஷ்ணன்.
    வீட்டில் விரும்பி அழைத்த செல்லப்பெயர் 
    பிச்சுக்குப்பன்.

    தந்தை சோமநாதரே
    பெரிய யோகி.
    தாய் பார்வதி
    சிவபக்தை.

    இருவரும் ராமேஸ்வரம் யாத்திரை சென்று நீண்டநாள் 
    பிள்ளையில்லா குறையை இறை முன்வைத்து சத்புத்திரன் வேண்டும் என்று தொழுதபடி இருந்தனர்.

    இறையனார்
    இருவர் கனவிலும்
    ஒரே சமயத்தில் தோன்றி 'சத்புத்திரனே பிறப்பான்' என்று உறுதி தந்தார்.

    அப்படித் தவமாய் தவமிருந்து வந்துதித்த அக்குழந்தை….
    ஓர் ஞானக் குழந்தையென ஒரு சில நாட்களிலேயே பெற்றோருக்குப் புரிய ஆரம்பித்தது.

    ஆம்….
    விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது. 

    முற்பிறப்பில் கற்றதெல்லாம் இப்பிறப்பிலும் அப்படியே நிறைந்திருந்தது.

    குருகுலக் கல்வி உறுதுணை செய்ய படிப்படியாய் 
    வளர்ச்சி கண்டது.

     வடமொழி வசமானது.

    தெலுங்கராய் பிறந்தும் தமிழராய் தவழ்ந்தும் இறையருள் கூடி சமஸ்கிருத ஞானம் நிறைந்து நின்றது.
    பற்பல பல கலைகள்….

    கற்றுத் தந்தவரே 
    போற்ற 
    சிறந்து விளங்கினான்
    சிறுவன் சிவராமகிருஷ்ணன்.

    'பால பருவத்திலேயே திருமணம் '
    அக்கால மரபு.

    எனவே
    பள்ளிப் பருவத்திலேயே 
    தெலுங்கு பிராமணர் முறைப்படி 
    கல்யாணம் 
    இனிது முடிந்தது.

    பால விவாகம்
    நூல்கள் படிப்பதற்கும் கல்வி கற்பதற்கும் இடையூறாய் இல்லை.

    சிறு பிராயத்திலேயே கல்வி கேள்விகளில் சிறந்திருந்தான் சிவராமகிருஷ்ணன்.

    அவனைக் 
    கண்ட மாத்திரத்திலேயே  'ஆகா…பேஷ்… .. பேஷ் '
    என்று வியந்து 
    வாழ்த்தினர் 
    ஆன்றோரும் சான்றோரும்,

    எல்லாம் சரியாகத்தான் போனது. 
    வீட்டில் ஒரு விழா அமர்க்களமாய் 
    நடக்கும் வரை.

    அது சமயம்
    சிவராமகிருஷ்ணனின் பிஞ்சு மனைவி பூப்படைந்திருந்தாள்.

    வீடு விழாவாக களைகட்டியிருந்தது. உறவினர் நண்பர்கள் உளம் மகிழ்ந்து கூடியிருந்தனர்.

    ஆளாளுக்கு ஒரு வேலை. பரபரப்பாய் இருந்தது வீடு.

    சிவராமகிருஷ்ணன் அன்றும் விடுப்பெடுக்காது கல்வி கற்க பாடசாலை சென்றுவிட்டான். 

    வீடு திரும்பிய வேளை
    வீட்டில் கூப்பாடும் கும்மாளமும் நிறைந்திருந்தது.

    விருந்து  அப்போது தான் தயாராகிக் கொண்டிருந்தது.

    சிவராமகிருஷ்ணனுக்கு அது பசி வேளை. கல்விச்சாலை செல்லும் அவசரத்தில் பாவம்….
    காலையிலும் உண்ணவில்லை.

    "பசிக்கிறது' என்றான்.
    நண்பர்கள் பரிகசித்தனர்..

    "அடேய்… என்ன பசி ?
    அந்தப் பசியா….?! "

    அன்றைய விழா முடிவில் சாந்திமுகூர்த்தம் என்பது மரபு.
    எனவே அவர்கள்
    கேலியில் 
    அர்த்தம் இருந்தது. 

    அடுப்படி சென்று அம்மாவைக் கேட்டான் "அம்மா பசிக்கிறது…
    அன்னம் வேண்டும்.."

    "டேய் பிச்சு ….
    அச்சு பிச்சுன்னு அலையாதே….
    பசி பொறுத்துக்கோடா …

    ஒரு நாள் பட்டினி கிடந்தால்
    குடிமுழுகிப் போய்விடாது..

    பேசாம இங்கேயே உட்கார்ந்து இரு…"

    போகிறபோக்கில் கடுப்பாய்
    அலட்சியமாய் சொல்லிவிட்டு 
    ஒரு மூலையைக் காட்டினாள்,
    அவசரகதியிலிருந்த அன்னை.

    அறிவுப் பசி
    நிறைந்திருப்பதைப்போல வயிற்றுப் பசியும்
    நிறைய வேண்டும் 
    என நினைத்திருந்த சிவராமகிருஷ்ணன்  யோசிக்க ஆரம்பித்தான்..

    நேரம் ஆக ஆக
    பசி பொறுமையைச் சோதித்தது. 

    உற்ற நண்பர்களின் 
    கேலி வெறுப்பேற்றியது.

    பெற்ற தாயின் உதாசீனம் சிந்திக்க வைத்தது.

    சிவராம கிருஷ்ணனின்
    திருமணத்தன்று கூட இப்படித்தான்.

    கல்யாண கலகலப்பில் மாப்பிள்ளையை யாரும் கண்டு கொள்ளவில்லை. மணமகனுக்குப் பசிக்கும் என யாருக்கும் 
    தோன்றவே இல்லை.

    அவரவர் வேலையில் அவசரமாய் இருந்தனர்.

    இன்றும் அதே நிலை.

    சிந்தனை தலைதூக்கியது. மகிழ்ச்சி மறைந்தோடியது.

    புதிய எண்ணம் பூத்தது.

    எல்லாம்  வேஷம் 
    சுற்றம் 
    உற்றம்
    நட்பு
    உறவு
    தாய் 
    மனைவி 
    எல்லாமே வேஷம்.

    ஒருவன் பசியால் 
    செத்துக் கொண்டிருந்தால் கூட 
    இவர்களுக்கு கவலையில்லை.

    காலன் வந்து கவர்ந்து சென்றாலும் 
    தடுக்க வரமாட்டார்கள்."

    பூத்த எண்ணம்
    பூங்கொத்தாய்
    விரிந்தது.

    கபிலவஸ்துவின் அரசிளங்குமரன்
    ஒரு நொடியில் முடிவெடுத்து 
    அரண்மனை துறந்தது துறவறம் பூண்டது, 
    ஞானம் பெற்றது நினைவுக்கு வந்தது.

    சித்தார்த்தன் 
    கௌதம புத்தர் 
    ஆன காட்சி 
    மனதின் சாட்சியானது.

    திருவெண்காடர்
    'காதற்ற ஊசியும் 
    வாராது காண் கடைவழிக்கே '
    என்ற இறைவாக்கை உணர்த்த ஒரு நொடியில் பட்டினத்து அடிகள் ஆனது நினைவில் வந்து நின்றது.

    ஒரே நொடிதான்.
    ஒரே ஒரு நொடிதான். 
    அந்த நொடி
    வாழ்வின் போக்கையே மாற்றி விடும்.

    சிவராமகிருஷ்ணன் 
    அந்த ஒரு நொடியில் முடிவெடுத்தான்.

    'உண்மை வேறு '
    என்ற 
    உண்மைத் தேடலில் விடைகொடுத்தான் விருந்திற்கு..
    விழாவிற்கு… விருந்தினர்க்கு….
    உறவுக்கு…..
    வீட்டுக்கு .

    வீட்டை விட்டு வெளியேறினான்.

    அப்போதும் 
    அவனுக்குப் 
    பசி இருந்தது.

    அது வேறு பசி….
    ஆசிரியர் கற்பிக்கும் அறிவுப்பசி அல்ல…
    வேறு பசி…
    குரு தீர்க்வல்ல
    ஞான பசி….

    தேடல்….
    உண்மையைத் தேடும் தேடல்..
    இறை தேடல்..
    இரை தேடல் அல்ல…
    இறை தேடல்.

    இல்வாழ்க்கை விடுத்து 
    இறை வாழ்க்கையை நிறையெனக்  கொண்ட இளம் வாலிபனின்
    இறை தேடல்…
    நிறை தேடல் …
    ஞானத் தேடல்…

    சிவராமகிருஷ்ணனின் கால்கள் சென்ற இடம் கும்பகோணம் ஸ்ரீமடம். முன்பு
    கல்வி பெற்ற குருகுலம்.

    அங்கு தான் 
    சிவராமகிருஷ்ணனின் குருகுல குரு 
    பரமசிவேந்திர சாஸ்திரி வீற்றிருந்தார்.

    சிவராமகிருஷ்ணன் கண்கள் அவரை தரிசித்தன.
    கரங்கள் குவித்தபடியே
    தாழ்பணிந்தான். சரணடைந்தான்.

    சிவராமகிருஷ்ணனின் விருப்பத்தையும் வைராக்கியத்தையும் அறிந்த குருநாதர் வியந்தார்.

    அதுவே பக்குவ நிலை என்பதை அனுபவித்தறிந்திருந்த குருநாதர்
    தன்  மாணவன்
    உலக வாழ்க்கையின் இன்ப துன்பங்களை வெறுத்துவிட்டு வந்திருப்பதைப் பாராட்டி அரவணைத்தார்.

    அன்றே அப்போதே
    உபதேசம் 
    ஆரம்பம் ஆனது.

    முன்பே 
    குருகுலக் கல்வி முடிந்தவுடன் திருவிசைநல்லூர் சென்று ராமையா சாஸ்திரிகளிடம் வேதாந்தம் கற்றிருந்ததும்
    'அய்யர்வாள் '
    என அறிஞர்களால் போற்றப்பட்ட 
    ஸ்ரீதர வெங்கடேசர் என்கின்ற 
    போதேந்திர சுவாமிகள், பிச்சாண்டார்கோவில் மகாபாஷ்யம் 
    கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் 
    ஆகியோரிடம்  
    ஆழப் பயின்றிருந்த
    வேத நுட்பங்களும்
    சிவராமகிருஷ்ணனை
    விரைவில்  ஞானம் பெற்றவனாக்கின..

    அது இறை விருப்பம்  அன்றி வேறு என்னவாயிருக்க முடியும் ?

    குரு பரமசிவேந்திரா 
    பரமே சிவனென
    திகழ்ந்த 
    சிவம் திகழ்ஞானி.

    அவர்தம் 
    மடம் வந்த வேளை
    சிவராமகிருஷ்ணனின் பசிப்பிணி முற்றிலும் பறந்து போனது.

    பசி என்ற சொல்லே 
    அதன் பின்னர்
    அவன் வயிற்றிலும் 
    வாயிலும் 
    ஏன் சிந்தையிலுமே எழவில்லை.

    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் சிவராமகிருஷ்ணன் 
    குரு மெச்சும் சீடனாய் 
    வேதாந்த வித்தகனாய் தர்க்கத்தில் வல்லவனாய் சாஸ்திர ஞானியாய் மிளிர்ந்து ஒளிர்ந்தார்.

    ஸ்ரீமடமெங்கும்
    சிவராமகிருஷ்ணன் பற்றிய பேச்சே இருந்தது பாராட்டும் மிகுந்தது.

    ஒரு நாள்….
    பரமகுரு 
    பரம சிவேந்திரா 
    சிவராம கிருஷ்ணனை அழைத்தார்.
     
    கும்பகோணம் 
    ஸ்ரீ மடமே 
    உச்சியில் வைத்துக் கொண்டாடியவனை
    உச்சி முகர்ந்து 
    "நீ உச்சத்தில் ஜொலிக்க வேண்டியவன் "
    மெல்ல சொன்னார்.

    கூடவே 
    பெயர் மாற்றம் தந்தார்.

     சதாசிவன் என்னும்
     புதுப் பெயரைச் சூட்டினார்.

    "ஈஸ்வர சொருபங்களுக்கெல்லாம் அதிபதியே சதாசிவம்.

    சதா சிவத்துடன் இணைந்திருப்பவள் உலகாளும் உமையவள் மனோன்மணி .

    அவளே சித்தர்கள் வணங்கிய தெய்வம்.

    அவள் துணையின்றி உயர்நிலை 
    உய்ய முடியாது… 

    நீ இனி
    சதா சிவமென இரு ."

    சதாசிவ – மனோன்மணி பெருமைகளை 
    எடுத்துக் கூறி 
    சீடருக்கு 
    சதாசிவன் 
    என நாமம் சூட்டினார் குருநாதர்.

    பின்னாளில் 
    யோக சித்திகளில் 
    சிறந்து 
    உலகை ஆளப்போகும் சீடருக்கு 
    சதாசிவம்
    என பெயரிட்டது வீண்போகவில்லை.

    அச் சீடர்
    அகிலம் வணங்கும் பேராற்றல் கொண்டவராக
    வல்லமை நிறைந்தவராகவே
    வலம் வந்தார்.

    'திருமூலருக்கு 
    அடுத்து 
    யோக சாதனைகள் அனைத்தும் 
    முழுதாய் செய்தவர்'
    என சித்தர் பரம்பரை பிரமித்து சுட்டிக்காட்டும் யோக சித்தராக விளங்கினார். 

    'மௌன குருவே'
    என 
    தாயுமானவரால் துதிக்கப்பட்ட
    அவர் ….

    பற்றற்றவர்..
    பேச்சற்றவர்…
    உடையற்றவர்….
    உணர்வற்றவர்….. 
    அவர்……. 

    பிரம்மேந்திரர்..
    சதாசிவ பிரம்மம்…
    சதாசிவ பிரம்மேந்திரர்.
     

  • Siddhargal Ariya Thagavalgal

    சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள் குறித்த சில அறிய தகவல்களை பார்க்கலாம்.

    பதஞ்சலி சித்தர் – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

    அகஸ்தியர் – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

    கமலமுனி – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

    திருமூலர் – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.

    குதம்பை சித்தர் – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.

    கோரக்கர் – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.

    தன்வந்திரி சித்தர் – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.

    சுந்தராணந்தர் – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

    கொங்ணர் – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

    சட்டமுனி – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

    வான்மீகர் – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

    ராமதேவர் – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.

    நந்தீஸ்வரர் – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

    இடைக்காடர் – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.

    மச்சமுனி – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

    கருவூரார் – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

    போகர் – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

    பாம்பாட்டி சித்தர் – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்….
     

  • Siddhargal Dyanam

    யோகக் கலையின் ஒரு பகுதியான தியானம் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு குழப்பம்  நிலவுகிறது. சித்தர்களும் ரிஷிகளும் செய்யும் தியானம் நம்மால் செய்ய முடியுமா? 

    ஒருவருக்கு  தியானப்பயிற்சி பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. சாதாரண மனிதரை மற்றவருக்குப் பயன்தரும் நல்ல குணங்கள் கொண்டவராக மாற்றுகிறது. நமது பொறுப்புகளை உணரச் செய்கிறது. வாழும் உயிர்களுக்கும் நமக்குமான உறவில்  உண்மையாக இருக்க நெறிப்படுத்துகிறது. 

    நம் மனதுக்கு உண்மையாக இருக்கும்படி நம்மைப் பண்படுத்துகிறது. உணர்வுகளைக்  கட்டுப்பாட்டில் வைப்பதும் கைவரும். தனக்காக மட்டுமே வாழாமல் பிறரின் நலனுக்காகவும் வாழ வேண்டியதன் அவசியம்  புரியும். தன்னை உணர்வதன் வழியாக எந்தச் சூழலிலும் மகிழ்வாக இருக்க முடியும். 
     
    மனதைச் சமநிலைக்குக் கொண்டு வருவதால் நம் நடத்தைகளைக் கவனித்துச் சரி செய்வது எளிதாகும். சுய மதிப்பீடு செய்து, நம்மை நாமே சரி செய்வதால் எண்ணங்கள் சுத்தமடையும். இதுவே செயலாக நம்மிலிருந்து வெளிப்படும். தியானம் உங்களுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நிகழ உதவுகிறது.
     
    மனப்பயிற்சியின் வழியாக நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு சிக்கலான சூழலையும் புரிந்து கொள்வது எளிதாகும். மனநிலையே உங்களது மூளையில் சுரக்கும் ரசாயனங்களின் விகிதத்தைத் தீர்மானிக்கிறது.
     
    மனம் சமநிலையில் இருக்கும்போது உங்களுக்குள் அதிகமாக பாசிட்டிவ் அதிர்வலைகளை உணர முடியும். மன அமைதிக்கும்  மகிழ்ச்சிக்கும் இப்படியான ஒரு நிலைக்கு உங்கள் மனம் நகர வேண்டும். தியானத்தின் வழியாகவே இந்த நிலையை நீங்கள்  அடைய முடியும்.
     

  • Siddhargal Ennum Perarivalargal

    சித்தர்கள்…என்று சொன்னாலே ஒரு சிலிர்ப்பு உச்சிமுதல் பாதம் வரை படரும். சொன்னவுடனே அவர்களின் அகண்ட பேரறிவு பற்றிய வியப்பு நம்மை உலுக்கிவிடும். நன்கு கூர்ந்து கவனித்தால் அவர்களின் அன்பு பேரண்டதைவிடப் பெரியது; அந்தப்பேரண்டம் முழுதும் நிறைந்து இருக்கும் அச்சிறு துளியில் நாம் நனைந்தால்கூடப் போதுமே என்ற எண்ணமே மேலோங்கும். 

    காரணம் அவர்களே குறிப்பிடுகிறார்கள் இனிக்கும், தித்திக்கும் இறையெனும் தேனைத் தொட்டுச் சுவைக்கவில்லை.  அந்தத் தேன் இருக்கும் கலனுக்குள்ளேயே விழுந்துவிட்டோம் என்கிறார்கள், எனில் அவர்கள் அனுபவிக்கும் அந்த இறையெனும் பேரறிவு, பேரானந்தம் எத்தகைய அதி தித்திப்பானது, எவ்வளவு உயர்வானது என்பதை நாம் ஓரளவுக்காவது நம் சிற்றறிவுக்கு எட்டியவரை புரிந்துகொள்ள இயலும்.

    சித்தர்கள் பற்றிய செவி வழிச்செய்திகளை விட அவர்கள் பாடல்களை சித்த மார்க்கத்தில் முறையாகப்பயணிக்கும் குருவிடம், முறையாக வெளிப்படுத்தும் சித்த மார்க்க ஆய்வாளர்களிடம் கேட்டு அறிந்து புரிந்து கொள்ள முயற்சிக்கும்போதுதான் நான் மேலே குறிப்பிட்ட வரிகளின் பொருள் புரியும்.  இல்லையெனில் சித்தர்கள் என்பவர்கள் டிவிக்களில்,செய்தித்தாள்களில் சித்த மருத்துவம் என்ற பெயரில் விளம்பரம் செய்யும் சிறு மருத்துவர்கள் அல்லது  குறி சொல்பவர்கள், சோதிடம் சொல்பவர்கள் என்று மட்டுமே தவறுதலாகப் புரிந்து கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிடும்.

    சரி அப்படி என்றால் சித்தர்கள் யார்? அவர்கள் என்ன என்ன செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? அவர்களால் மனிதகுலம் இன்று சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு தர முடிந்ததா? அவர்கள் கடவுளர்களா? கடவுளின் தூதுவர்களா?  யார்தான் அவர்கள் எனும் கேள்விகள் பல எழுவது இயற்கை.

    "என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே" 

    என்கிறார்  திருமூலர் சித்தர் பெருமான்.

    சரி…ஏன் சித்தர்கள் ஆங்கிலத்தில், பிரெஞ்சில், ருஷ்ய மொழியில் என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய் ஆங்கிலம் செய்யுமாறே, பிரெஞ்சு செய்யுமாறே, ருஷ்ய செய்யுமாறே…என்று கூறவில்லை?

    அவர்கள் ஏன் தமிழைத்தவிர பிற மொழிகளில் சித்தரிலக்கியம் எழுதப்படவில்லை?

    "அவனருளாலே அவன்தாள்  பணிந்து" என்பது தமிழரின் இறைபற்றிய புரிதல். அதாவது, "அவனது (இறைவனது) கால்களைப்பற்ற வேண்டுமானால் (வணங்க வேண்டுமானால்) அதற்கும் அவனருள் இருந்தால்தான் சாத்தியம்" என்பதைப்போல சித்த பெருமக்களின் அருளாசியை வேண்டி வணங்கிக் கோரி "சித்தர்கள் எனும் பேரறிவாளர்கள்" தொடரில்  சக்தி ஆன்லைன் இணையத்தில் நாம் அனைவரும் பயணிப்போம். மிகைப்படுத்தல் ஏதும் இன்றி உள்ளது உள்ளபடி அறிய முயற்சிப்போம்.  

    ஓம் நமசிவய.

    –  விஸ்வநாத்