Tag: Selva valam

  • Selva valam tharum puratasi vazhipadu

    புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் மகத்துவமே தனித்துவமானது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். தூய்மையான பக்தியோடு பெருமாளை, திருப்பதி ஏழுமலையானை வணங்கினால் ஏழையாக இருந்தாலும் வைகுண்ட பிராப்தியை அளிப்பார்.  

    திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம்.

    புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை போட்டு வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    பெருமாளுக்கு தூய பச்சரிசி மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
     

  • Selva valam tharum chitra pournami

    சித்ரா பவுர்ணமி சித்திரை மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வின் போது தர்ம தேவதையான எமதர்மராஜனின், உதவியாளரான (கணக்கு பிள்ளை) சித்திர குப்தனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இத்தினத்தில் சிவன் மற்றும் அம்மன் வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

    சித்திரை மாதத்தில் குளிர் முழுவதும் முடிந்து இளவெயில் ஆரம்பமாகிறது. எனவே இவ்விழா வசந்த காலத்தை வரவேற்கும் உற்சாக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக இவ்விழா நாளன்று மக்கள் நீர் நிலைகளில் புனித நீராடலை மேற்கொள்கின்றனர்.

    பொங்கல் வைத்து படையலிட்டும், அன்னதானம் செய்தும் மக்கள் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். சித்ரா பவுர்ணமி அன்று விரதம் மேற்கொள்கின்றனர். இதனால் வாழ்வின் துன்பங்கள் நீங்கி வளம் பெறுவதாகவும், எம பயம் நீங்கி நீண்ட ஆயுள் கிடைப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர்.

    இத்தினத்தன்று இரவு மக்கள் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் கூடி நிலவொளியில் அமர்ந்து சித்ரான்னம் என்று சொல்லக் கூடிய பல வகையான கலவை சாத வகைகளை பகிர்ந்து உண்டு மகிழ்கின்றனர். இவ்வாறு சித்ரா பவுர்ணமி இரவு உணவு உண்ணும் நிகழ்ச்சி பற்றி சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.