Tag: Sani bagawan

  • Sani Bagawan Slogam

    சனி ஸ்லோகம்

    நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
    சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

    அர்த்தம்:

    கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

    பொதுவான பரிகாரங்கள்:

    தினமும் வினாயகர் – ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

    தினமும் வினாயகர் அகவல் – ஹனுமான சாலீசா – சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்று தரும்.

    அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும்.

    தினமும் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்வது – குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும்.

    தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.
     

  • Sani Bagawan Parigaram

    சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம். ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

    எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார்.

    ஆண்டவனுக்கு தெரியும். நமக்கு எது, எப்போ கிடைக்கனும்னு. மேல நடக்க வேண்டியதை பார்க்கலாம். இதுக்கு மேல நீங்கதான் ராஜா! கலக்க போறீங்க.

    இது எல்லாமே, சனியால அவஸ்தை பட்டவங்களுக்கு நல்லா புரியும். மத்தவங்களுக்கு ஒரு காமெடியா தெரியலாம். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையாக பாதிக்க படக்கூடாதுங்கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். 

    பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
        
    வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.இந்த பச்சரிசி மாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும். 

    இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும். அப்படி மாறியதும்,அதன் வலு இழந்து போய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போடவேண்டும்.

    ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச் சனி,அஷ்டமச் சனி,கண்டச் சனி,அர்த்தாஷ்டகச் சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.
    உடல், ஊனமுற்றவர்களுக்கு – காலணிகள், அன்ன தானம் – அளிப்பது , மிக நல்லது.

  • Sani bagawan koil peyarchi

    திண்டுக்கல்லில் 120 வருடங்கள் பழமையான சனி பகவான் கோவிலில் நடை பெற்ற பெயர்ச்சி விழாவில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று  சாமி தரிசனம் செய்தனர்0.

    நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான வழக்கமாக கருதப்படுவது சனி கிரகம் ஆகும் சனிபகவான் கொடுப்பதையும் எடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது அப்பேர்பட்ட சனி பகவான் 2,1/2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 24.01.20 பெயர்ச்சியானார்  திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் 120 வருடங்கள் பழமையான சனீஸ்வர பகவான்  கோவில் உள்ளது. 

    தமிழகத்திலேயே திண்டுக்கலில் தான் சனிபகவான் என்று தனியாக கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இங்கு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிபகவான் இன்று  காலை 9 : 57 மணி அளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனார். 

    இதனை முன்னிட்டு இன்று காலை கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து சனி பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது பெயர்ச்சியான நேரத்தில் சனி பகவானுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் வந்து சனிபகவானை வழிபட்டு பெற்றுச் சென்றனர்.