ஏப்ரல் 27 – சங்கடஹர சதுர்த்தி…
குரோதி வருடம் – சித்திரை – 14
ஏப் 27, 2024
சனி
சங்கடஹர சதுர்த்தி
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 7.33
நட்சத்திரம் : அனுஷம் அ.கா 3.01
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : அசுவினி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Tag: Sangadahara chadurthi
-
April 27 2024 sangadahara chadurthi
-
June 07 2023 Sangadahara chadurthi
ஜூன் 7 – சங்கடஹர சதுர்த்தி
சோபகிருது வருடம் – வைகாசி 24
சங்கடஹர சதுர்த்தி
சுபமுகூர்த்த நாள்
07-ஜூன்-2023 புதன்
சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி ந.இ 1.22
நட்சத்திரம் : உத்திராடம் ந.இ 12.29
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்,திருவாதிரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
June 7 2022 Sangadahara chadurthi
ஜூன் 17 – சங்கடஹர சதுர்த்தி
சுபகிருது வருடம் – ஆனி 3
சங்கடஹர சதுர்த்தி
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
17-ஜூன்-2022 வெள்ளி
சுபமுகூர்த்த நாள்(காலை 09:00 – 10:30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 10.41
நட்சத்திரம் : உத்திராடம் ம 2.33
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்,திருவாதிரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
September 24 2021 sangadahara chadurthi
செப்டம்பர் 24 – சங்கடஹர சதுர்த்தி
பிலவ வருடம் – புரட்டாசி 8
24-செப்-2021 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 8.52
நட்சத்திரம் : அசுவினி கா 10.02
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
March 31 sangadahara chadurthi
மார்ச் 31 – சங்கடஹர சதுர்த்தி
சார்வரி வருடம் – பங்குனி 18
சங்கடஹர சதுர்த்தி
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
திருப்பரங்குன்றம் முருகன் தேர்
31-மார்-2021 புதன்
சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை மா 6.32
நட்சத்திரம் : சுவாதி ம 1.39
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
October 5 sangadahara chadurthi
அக்டோபர் 5 – மஹா சங்கடஹர சதுர்த்தி
சார்வரி வருடம் – புரட்டாசி 19
05-அக்-2020 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 8.54
நட்சத்திரம் : பரணி ப 2.36
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
September 5 Sangadahara Chadurthi
செப்டம்பர் 5 – சங்கடஹர சதுர்த்தி
சார்வரி வருடம் – ஆவணி 20
ஆசிரியர் தினம்
05-செப்-2020 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை மா 4.05
நட்சத்திரம் : ரேவதி ந.இ 2.34
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
August 7 Maha Sangadahara chadurthi
ஆகஸ்ட் 7 மகா சங்கடஹர சதுர்த்தி
சார்வரி வருடம் – ஆடி 23
மகா சங்கடஹர சதுர்த்தி,
சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் தேர்
07-ஆக-2020 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி ந.இ 2.13
நட்சத்திரம் : பூரட்டாதி ப 2.28
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Sangadahara chadurthi story
முன்பு ஒரு காலத்தில் பிரம்மன், சிவபெருமானை தரிசிக்க திருக்கயிலாயத்திற்கு சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார். அந்த தெய்வீகக் கனியை முருகனுக்கு கொடுக்கும் படி பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறினார்.
சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப்பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோப பார்வை பிரம்மனை அஞ்சி நடுங்கச் செய்தது. தன் தவறை உணர்ந்த பிரம்மன், விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழையை பொருத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார்.
இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்தான். முனிவர்கள், ரிஷிகள் பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர் கோபப்பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே! உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது. உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார். அப்போதே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பவுர்ணமி பூஜை, அமாவாசை திதி எதுவும் நடைபெறவில்லை.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். கருணைக்கடவுளான விநாயகர் மனம் மகிழ்ந்து ‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.
இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். அவ்வாறு சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததானது. வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீங்கு விளையும். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர். முற்பிறவியில் நாம் செய்த வினையின் பயனால், நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.
-
Sangadahara chadurthi endral enna
நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் இலகுவாக முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது. அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கின்றனர்.
விநாயகர் முழு முதற்கடவுள் ஆவார். விநாயகர் என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். விக்னங்களுக்கு அதிபதியான அவர், நாம் தொடங்கும் சுபகாரியங்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் அருளாசி புரிகிறார்.
சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு ‘சங்கட’மாக மருவி, உருமாற்றம் பெற்று விட்டது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். இது இருள் சூழும் மாலை நேரத்தில் வரும். நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர் களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் பிள்ளையாரை வணங்கி நலம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வந்தாலும், விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தி ‘மகாசங்கடஹர சதுர்த்தி’ எனப்படும். அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.