Tag: Remedy

  • Benefits of lighting a ghee lamp!

    இறைவனை வழிபடுவதில் தீப வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தீப ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் லட்சுமி தேவியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளி அருள்புரிவதாக ஐதீகம் உள்ளது. ஆகவே, தீபத்தில் முப்பெரும் தேவியரும் கடாட்சம் செய்வதாக நம்பப்படுகிறது.

    விளக்குகளின் எண்ணிக்கை மற்றும் பலன்கள்:

    • 5 நெய் விளக்குகள்: சிறந்த கல்வி மற்றும் ஞானம் பெறலாம்.

    • 9 நெய் விளக்குகள்: நவகிரக தோஷங்கள் விலகும்.

    • 12 நெய் விளக்குகள்: தடைகள் நீங்கி, எடுத்த காரியம் வெற்றியடையும்.

    • 18 நெய் விளக்குகள்: கால சர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் அகலும்.

    • 27 நெய் விளக்குகள்: திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    • 36 நெய் விளக்குகள்: சகல தோஷங்களும் நீங்கும்.

    • 48 நெய் விளக்குகள்: தொழில் விருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    • 108 நெய் விளக்குகள்: அம்மனின் அருள் முழுமையாக பெறலாம்.

    நெய் விளக்கு ஏற்றிய பிறகு, கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வருவது சிறப்பு.

    நெய் தீப பரிகாரங்கள்:
    வீடுகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது மாலை 6 மணிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நாகராஜ சிலைக்கு அபிஷேகம் செய்து, செவ்வரளி சாற்றி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால், தம்பதியரிடையே ஒற்றுமை நிலைக்கும்.

    பித்ரு தோஷம் உள்ளவர்கள் அமாவாசை அன்று பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றினால் தோஷம் நீங்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்து, தொடர்ந்து நெய் தீபம் ஏற்றினால், விரைவில் கருத்தரிக்கலாம். தீபம் ஏற்றும்போது வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்து ஏற்றினால் செல்வ செழிப்பு பெருகும்.

    கோவில்களில் அதிகாலை, நண்பகல், அந்தி பொழுது நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. கருவறையில் உள்ள தூங்கா விளக்கில் நெய் ஊற்றி வழிபட்டால், கடுமையான பிரச்சினைகளும் விலகும். சமூக வலைதளங்களில், இந்த பரிகாரங்களை பலரும் பகிர்ந்து, இறைவனின் அருளை பெறுவதற்கு நெய் தீபம் ஏற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.

  • Do this to remove negative energy and evil eye from your home!

    வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை, சச்சரவுகள், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். இதை தடுக்க, கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டு வாசலில் கட்டி வைப்பது அல்லது தொட்டிகளில் வளர்ப்பது வழக்கம். கற்றாழை உடல், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பணப்பிரச்சினை மற்றும் குடும்ப சண்டைகளை போக்கும் ஆற்றலையும் கொண்டது.

    நேர்மறை ஆற்றல் பெருகும்: கற்றாழை செடி உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற தாவரம். இதன் சிறப்பை உணர்ந்து, பலரும் இன்று வீடுகளில் துளசி செடியைப் போல கற்றாழையையும் தொட்டிகளில் வளர்க்கின்றனர். வாஸ்து சாஸ்திரப்படி, சரியான திசையில் கற்றாழை வளர்த்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதனால், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

    அதிர்ஷ்டம் தரும் கற்றாழை: ஆலோவேரா என்று அழைக்கப்படும் கற்றாழை, அதிர்ஷ்டத்தையும் தரக்கூடியது. வீட்டு வாசலில் கற்றாழை கட்டி வைப்பதால் கண் திருஷ்டியும் எதிர்மறை ஆற்றலும் வீட்டிற்குள் நுழையாது. இதனால், குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை, சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவும்.

    மகிழ்ச்சி மற்றும் நிம்மதி: கிராமங்களில் வீட்டு வேலிகளை சுற்றி கற்றாழை வளர்ப்பது பாம்பு போன்ற விஷ ஜந்துகளை தடுக்க உதவும். வீடு சண்டைகளால் போர்க்களமாக இருந்தால், கற்றாழை வளர்ப்பது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அதிகரிக்கும்.

    பதவி உயர்வு மற்றும் பண வரவு: பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருப்பவர்கள், கற்றாழையை கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வளர்த்தால் மன அமைதி பெறலாம். மேற்கு திசையில் வளர்த்தால் வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, பண வரவு அதிகரிக்கும்.

    கற்றாழை பரிகாரம்: பண வரவை அதிகரிக்க, கற்றாழையை வாசல் அல்லது பால்கனியில் தொட்டியில் வளர்க்கலாம். பரிகாரத்திற்காக வளர்க்கும் கற்றாழையை வெட்டக்கூடாது. தினமும் தண்ணீர் ஊற்றி, குல தெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்.

    புதன் கிழமை பரிகாரம்: தாமிர பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்து, சிறிது சோம்பு, ஒரு ஏலக்காய், ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து, இரவு பூஜை அறையில் வைக்கவும். மறுநாள் காலை குளித்து, சாமி கும்பிட்ட பின், அந்த தண்ணீரை கற்றாழைக்கு ஊற்றவும். இதனால், பண வரவு அதிகரிக்கும், கடன் பிரச்சினைகள் தீரும். நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.