Tag: Ragavendrar

  • Sri Ragavendrar Viradham

    மகான் ஸ்ரீ ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். முதல் வியாழக்கிழமை காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து, தூய ஆடை அணிந்து கொண்டு அவரவர் விருப்பப்படி நெற்றியில் திருநீறு அல்லது சந்தனம், திருநாமம் அணியவேண்டும்.

    பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும். நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம்.

    பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும்.

    மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய
    சத்ய தர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்
    ஸ்ரீ காம தேநுவே

    என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

    இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும்.

    ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை.

    ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் திரவ பதார்த்தங்கள் அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் அன்னம் சாப்பிடலாம். இதுபோல் விரதம் கடைப்பிடித்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கும்.

  • Sri Ragavendrar mandiram

    உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர். 

    அப்படி வாழ்ந்த ஒரு மகான் “ஸ்ரீ ராகவேந்திரர்” அவரை வழிபடும் மந்திரம் இது. 

    ஸ்ரீ ராகவேந்திரர் மந்திரம்…. 

    ஓம் வெங்கட நாதாய வித்மஹே 
    ஸச் சித்தானந்தாய தீமஹி 
    தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத் 

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம். 

    காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர். 

    ஆன்மீக பூமியான தமிழ் நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர் தான் ஸ்ரீ ராகவேந்திரர். இவர் இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் வழிபாட்டை மக்கள் அனைவரிடமும் பரப்பும் புண்ணிய பணியை மேற்கொண்டார். மகானாகிய ஸ்ரீ ராகவேந்திரர் தன்னை சோதிக்க நினைத்தவர்களுக்கு அவர்களின் அகங்காரத்தை அடக்கி ஞானத்தை அருளினார். தன்னை உள்ளன்போடு வணங்கியவர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தினார். அப்படிப்பட்ட மகானுக்குரிய இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். 
     

  • Sri Ragavendrar Viradham

    மகான் ஸ்ரீ ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். முதல் வியாழக்கிழமை காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து, தூய ஆடை அணிந்து கொண்டு அவரவர் விருப்பப்படி நெற்றியில் திருநீறு அல்லது சந்தனம், திருநாமம் அணியவேண்டும்.

    பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும். நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம். 

    பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும்.

    மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய
    சத்ய தர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்
    ஸ்ரீ காம தேநுவே

    என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும். 

    இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும்.

    ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை.

    ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் திரவ பதார்த்தங்கள் அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் அன்னம் சாப்பிடலாம். இதுபோல் விரதம் கடைப்பிடித்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கும்.

  • Sir Ragavendrar viradham

    மகான் ஸ்ரீ ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். முதல் வியாழக்கிழமை காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து, தூய ஆடை அணிந்து கொண்டு அவரவர் விருப்பப்படி நெற்றியில் திருநீறு அல்லது சந்தனம், திருநாமம் அணியவேண்டும்.

    பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும். நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம். 

    பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும்.

    மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய
    சத்ய தர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்
    ஸ்ரீ காம தேநுவே

    என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும். 

    இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும்.

    ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை.

    ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் திரவ பதார்த்தங்கள் அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் அன்னம் சாப்பிடலாம். இதுபோல் விரதம் கடைப்பிடித்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கும்.

  • Ragavendrar mandiram

    குருஜி ஸ்ரீ ராகவேந்திரருக்கு உகந்த வியாழக்கிழமைகளில் அவரை வணங்கி இந்த 108 போற்றிகளை உச்சரித்தால் வாழ்வில் சுபிட்ஷம் பெருகும். 

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய

    சத்ய தர்ம ரதாயச

    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்

    ஸ்ரீ காம தேநுவே

    ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
    ஓம் காமதேனுவே போற்றி
    ஓம் கற்பகவிருட்சமே போற்றி
    ஓம் சத்குருவே போற்றி
    ஓம் சாந்தரூபமே போற்றி
    ஓம் ஞான பீடமே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் ஜீவ ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
    ஓம் துளசி வடிவமே போற்றி

    ஓம் தேவ தூதனே போற்றி
    ஓம் பிரகலாதனே போற்றி
    ஓம் பக்தப் பிரயனே போற்றி
    ஓம் திவ்ய ரூபமே போற்றி
    ஓம் தர்ம தேவனே போற்றி
    ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
    ஓம் அன்பின் உருவமே போற்றி
    ஓம் காவியத் தலைவனே போற்றி
    ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
    ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி

    ஓம் துவைத முனிவரே போற்றி
    ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
    ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
    ஓம் குருராஜரே போற்றி
    ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
    ஓம் மத்யமவத பீடமே போற்றி
    ஓம் தீனதயாளனே போற்றி
    ஓம் கருணா மூர்த்தியே போற்றி
    ஓம் ஜெகத் குருவே போற்றி
    ஓம் கலியுகக் கடவுளே போற்றி

    ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
    ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
    ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
    ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
    ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
    ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
    ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
    ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
    ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
    ஓம் அறிவின் சுடரே போற்றி

    ஓம் பண்டித மேதையே போற்றி
    ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
    ஓம் வெங்கட பட்டரே போற்றி
    ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
    ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
    ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
    ஓம் அமானுஷ சக்தியே போற்றி
    ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி

    ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
    ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
    ஓம் தூய்மை நிதியே போற்றி
    ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் கண்னனின் தாசனே போற்றி
    ஓம் சத்ய ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
    ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
    ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
    ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி

    ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
    ஓம் மகிமை தெய்வமே போற்றி
    ஓம் அணையர் தீபமே போற்றி
    ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
    ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
    ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
    ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
    ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
    ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி

    ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாச பகவானரே போற்றி
    ஓம் சங்கு கர்ணரே போற்றி
    ஓம் பரமாத்மாவே போற்றி
    ஓம் குருதேவரே போற்றி
    ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
    ஓம் தயாநிதியே போற்றி
    ஓம் அருட்தவசீலரே போற்றி
    ஓம் ஞான மூர்த்தியே போற்றி
    ஓம் விஷ்ணு பக்தரே போற்றி

    ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
    ஓம் அமுத கலசமே போற்றி
    ஓம் அழகின் உருவமே போற்றி
    ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
    ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
    ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
    ஓம் மங்களம் தருபவரே போற்றி
    ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
    ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
    ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
    ஓம் காந்தக் கண்களே போற்றி
    ஒம் யதிராஜரே போற்றி
    ஓம் ஓம்கார ரூபமே போற்றி
    ஓம் பிரம்ம ஞானியே போற்றி
    ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
    ஓம் இணையில்லா இறைவனே போற்றி

    ஓம் விபீஷணரே போற்றி
    ஓம் அனாத ரட்சகரே போற்றி
    ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
    ஓம் சுந்தர வதனரே போற்றி
    ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
    ஓம் நரஹரி பிரியரே போற்றி
    ஓம் தியாகமூர்த்தியே போற்றி
    ஓம் வாணியின் வீணையே போற்றி
     

  • Sri Ragavendrar Manthiram

    உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர். 

    அப்படி வாழ்ந்த ஒரு மகான் “ஸ்ரீ ராகவேந்திரர்” அவரை வழிபடும் மந்திரம் இது. 

    ஸ்ரீ ராகவேந்திரர் மந்திரம்…. 

    ஓம் வெங்கட நாதாய வித்மஹே 
    ஸச் சித்தானந்தாய தீமஹி 
    தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத் 

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம். 

    காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர். 

    ஆன்மீக பூமியான தமிழ் நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர் தான் ஸ்ரீ ராகவேந்திரர். இவர் இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் வழிபாட்டை மக்கள் அனைவரிடமும் பரப்பும் புண்ணிய பணியை மேற்கொண்டார். மகானாகிய ஸ்ரீ ராகவேந்திரர் தன்னை சோதிக்க நினைத்தவர்களுக்கு அவர்களின் அகங்காரத்தை அடக்கி ஞானத்தை அருளினார். தன்னை உள்ளன்போடு வணங்கியவர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தினார். அப்படிப்பட்ட மகானுக்குரிய இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.