Tag: potrigal

  • Sivan potrigal

    காலையில் துயில் எழும் போது :-
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி 
    கண்ணார் அமுதக் கடலே போற்றி

    குளிக்கும் போது :-
    சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

    கோபுர தரிசனம் காணும் போது :-
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :-
    காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

    நண்பரைக் காணும் போது :-
    தோழா போற்றி துணைவா போற்றி

    கடை திறக்கும் போது :-
    வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

    நிலத்தில் அமரும் போது :-
    பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

    நீர் அருந்தும் போது :-
    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

    அடுப்பு பற்ற வைக்கும் போது:-
    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

    உணவு உண்ணும் போது :-
    தென்தில்லை மன்றினுள் 
    ஆடி போற்றி
    இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

    மனதில் அச்சம் ஏற்படும் போது :-
    அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

    உறங்கும் போது :-
    ஆடக மதுரை அரசே போற்றி
    கூடல் இலங்கு குருமணி போற்றி

    எல்லாம் சிவமயம்
    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.