Tag: Pillayar patti

  • Pillayar patti kodiyetram

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பகவிநாயர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    10 நாட்கள் நடைபெறும் விழாவில் 9 வது நாள் தேரோட்டமும் 10வது நாளான விநாயகர் சதுர்த்தியன்று காலை தீர்த்தவாரியும் முக்குறுனி கொழுக்கட்டை படையலும் நடைபெறும்.

    இன்று முதல் மாலை சிம்மம், குதிரை, க கமலம்,யாளன, உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலாவும் வரும் வியாழக்கிழமை மாலை சூரசம்ஹாரம்மும் நடைபெற உள்ளது.

    நாளை முதல்  தினமும் காலை வெள்ளி கேடகத்தில் சுவாமி உலா நடைபெறும் விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி நகர டிரஸ்டிகள் கவனித்து வருகின்றனர்.