Tag: Panguni Uthira

  • Pazhani Panguni Uthira Thiruvizha

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற மார்ச் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைப்பதால், தீர்த்த காவடியுடன் பக்தர்கள் அமர பந்தல் அமைக்கப்பட உள்ளது. 

    கட்டண தரிசனம், கட்டளை தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றுக்கு தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 10 நாட்களும் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.